வியன்னா: "அணு குண்டுகள் தயாரிக்க பயன்படும் புளூடோனியம் அணு உலைகளை அமைக்கும் பணியில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே அணு ஆயுத போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது. "டெய்லி டைம்ஸ்' பத்திரிகையில், சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையத்தை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: வர்த்தக நோக்கத் துக்காக அமெரிக்காவால் செலுத்தப்பட்ட சேட்டிலைட் அனுப் பிய புகைப்படங்களில் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் பாக்., தீவிரமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, பாக்., - இந்தியா இடையே அணு ஆயுத போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத

0 comments:
Post a Comment