தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கல்வியும் செல்வமும்

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் கல்வித் துறைக்கு அள்ளி இறைக்கும் நிதி, எந்தக் காலத்திலும் எந்த அரசினாலும் செலவிடப்படாதஅளவிற்கு உள்ளது என்கின்ற தொழிற்கட்சி, தாம் கல்வி முறையில், கல்விச் சாலைகளில் செய்த மாபெரும் மாற்றங்களைச் சுட்டிக் காட்டி,தமது வெற்றிகளைக் கணக்கிலெடுக்காது, எங்காவது மூலையில் நடக்கும் ஒரு தோல்வியை மட்டும் பெரிதுபடுத்தி தம்பட்டம் அடிக்கிறார்கள்எதிர்க்கட்சியினர் என்கிறார்கள்.அதுதானே எதிர்க்கட்சியின் அரசியல் தர்மம்......? இது ஏன் அவர்களுக்குப் புரியவில்லையோ?இது இன்றைய முக்கிய சர்ச்சைக்குள் அரசை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது எனலாம். ஆமாம் இங்கிலாந்து அமைச்சரவையில் சமூக,கலாச்சார, பெண்ணியம் ஆகியவற்றின் தற்போதைய அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமாகிய திருமதி ரூத் கெலி ( ஙழ்ள். தன்ற்ட் ஓங்ப்ப்ஹ்) தன் மகனைத் தனியார்பாடசாலை ஒன்றில் அனுமதித்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சையே இது.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரச பாடசாலைகளில் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளோம் என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தத் தொழிற்கட்சியின் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், அதுவும் முன்னைநாள் கல்வித் துறையமைச்சர் தன் மகனைத் தனியார்பாடசாலைக்கு அனுப்புவது அவர் தன் அரசாங்கத்தின் கூற்றையே மறுதலிப்பாகாதா? என்பதுதான் எதிர்த்தரப்பினரின் வாதம்.ஆனால் இன்றைய பத்திரிகைச் செய்திகளின்படி இந்த அமைச்சருடைய மகன் வாசிப்பதில் சிரமம் உடைய ஒரு வியாதியைக் ( ஈஹ்ள்ப்ங்ஷ்ண்ஹ) கொண்டிருப்பதாகவும் அதன்நிமித்தமாக மருத்துவர்களுடனும், கல்வி அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே அவர் இந்தமுடிவை எடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கு இது ஒரு தலையிடியாகத்தான் அமைந்துள்ளது. இன்னும் சில மாதங்களேபதவியிலிருக்கப் போகும் பிரதமர், எத்தகைய நினைவுகளை, சாதனைகளை மக்கள் மனத்தில் நிலை நிறுத்திவிட்டுப் போகப் போகின்றார் என்றகேள்வி எழும் வேளையிலே இது அவருக்கு தேவையில்லாத ஒன்று இங்கே நாம் சில கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது.அரச பாடசாலைகளின் தரத்தை உயர்த்தி, வாழ்க்கையின் சாராசரிப் படிகளிலே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும்தேவையான வசதிகளுடன் கல்வி பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது, அரசாங்கம். பாடசாலைகளின் தரத்தை உயர்த்த, உயர்த்தமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றனவோ என்னும் கேள்வி எழத்தான் செய்கின்றது.எதிர்பார்ப்புகளுக்கும், அதை அடையும் வேகத்திற்கும் இடையே உள்ள வெளி அதிகரிக்கின்றது. இந்த ஏமாற்றம், ஆத்திரமாக அரசாங்கத்தின்மீதும், அதில் அங்கம் வகிப்போரின் மீதும் விழுகின்றது. இந்த வேளையில்தான் அந்த அமைச்சரும் மாட்டிக்கொண்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.அது மட்டுமல்ல இன்றைய இங்கிலாந்திலே, விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்திலே வர்க்க பேதம் அடிபட்டுப் போனது போலத் தோன்றுகின்றது.ஒரு நாட்டிலே நடுத்தர வர்க்கம் மிகையாகி விட்ட நிலையிலே, சோசலிஸக் கொள்கைகள் எந்த அளவிற்கு எடுபடும் என்பது கேள்விக் குறியே

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive