ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதியமைச்சர் கல்வித் துறைக்கு அள்ளி இறைக்கும் நிதி, எந்தக் காலத்திலும் எந்த அரசினாலும் செலவிடப்படாதஅளவிற்கு உள்ளது என்கின்ற தொழிற்கட்சி, தாம் கல்வி முறையில், கல்விச் சாலைகளில் செய்த மாபெரும் மாற்றங்களைச் சுட்டிக் காட்டி,தமது வெற்றிகளைக் கணக்கிலெடுக்காது, எங்காவது மூலையில் நடக்கும் ஒரு தோல்வியை மட்டும் பெரிதுபடுத்தி தம்பட்டம் அடிக்கிறார்கள்எதிர்க்கட்சியினர் என்கிறார்கள்.அதுதானே எதிர்க்கட்சியின் அரசியல் தர்மம்......? இது ஏன் அவர்களுக்குப் புரியவில்லையோ?இது இன்றைய முக்கிய சர்ச்சைக்குள் அரசை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது எனலாம். ஆமாம் இங்கிலாந்து அமைச்சரவையில் சமூக,கலாச்சார, பெண்ணியம் ஆகியவற்றின் தற்போதைய அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமாகிய திருமதி ரூத் கெலி ( ஙழ்ள். தன்ற்ட் ஓங்ப்ப்ஹ்) தன் மகனைத் தனியார்பாடசாலை ஒன்றில் அனுமதித்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சையே இது.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அரச பாடசாலைகளில் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளோம் என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தத் தொழிற்கட்சியின் அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், அதுவும் முன்னைநாள் கல்வித் துறையமைச்சர் தன் மகனைத் தனியார்பாடசாலைக்கு அனுப்புவது அவர் தன் அரசாங்கத்தின் கூற்றையே மறுதலிப்பாகாதா? என்பதுதான் எதிர்த்தரப்பினரின் வாதம்.ஆனால் இன்றைய பத்திரிகைச் செய்திகளின்படி இந்த அமைச்சருடைய மகன் வாசிப்பதில் சிரமம் உடைய ஒரு வியாதியைக் ( ஈஹ்ள்ப்ங்ஷ்ண்ஹ) கொண்டிருப்பதாகவும் அதன்நிமித்தமாக மருத்துவர்களுடனும், கல்வி அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே அவர் இந்தமுடிவை எடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் டோனி பிளேயரின் அரசாங்கத்திற்கு இது ஒரு தலையிடியாகத்தான் அமைந்துள்ளது. இன்னும் சில மாதங்களேபதவியிலிருக்கப் போகும் பிரதமர், எத்தகைய நினைவுகளை, சாதனைகளை மக்கள் மனத்தில் நிலை நிறுத்திவிட்டுப் போகப் போகின்றார் என்றகேள்வி எழும் வேளையிலே இது அவருக்கு தேவையில்லாத ஒன்று இங்கே நாம் சில கேள்விகளை முன்வைக்கவேண்டியுள்ளது.அரச பாடசாலைகளின் தரத்தை உயர்த்தி, வாழ்க்கையின் சாராசரிப் படிகளிலே வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும்தேவையான வசதிகளுடன் கல்வி பயிற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது, அரசாங்கம். பாடசாலைகளின் தரத்தை உயர்த்த, உயர்த்தமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கின்றனவோ என்னும் கேள்வி எழத்தான் செய்கின்றது.எதிர்பார்ப்புகளுக்கும், அதை அடையும் வேகத்திற்கும் இடையே உள்ள வெளி அதிகரிக்கின்றது. இந்த ஏமாற்றம், ஆத்திரமாக அரசாங்கத்தின்மீதும், அதில் அங்கம் வகிப்போரின் மீதும் விழுகின்றது. இந்த வேளையில்தான் அந்த அமைச்சரும் மாட்டிக்கொண்டாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது.அது மட்டுமல்ல இன்றைய இங்கிலாந்திலே, விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்திலே வர்க்க பேதம் அடிபட்டுப் போனது போலத் தோன்றுகின்றது.ஒரு நாட்டிலே நடுத்தர வர்க்கம் மிகையாகி விட்ட நிலையிலே, சோசலிஸக் கொள்கைகள் எந்த அளவிற்கு எடுபடும் என்பது கேள்விக் குறியே

0 comments:
Post a Comment