தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உலக அளவில் பெண் குழந்தை பற்றாக்குறை ஏற்படும்!

குழந்தை பாக்கியம் கிடைத்தும் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களை பற்றி ஜாதகத்தில் முன்னறிய முடியுமா?உலகில் இன்று பலர் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்குகின்றனர். ஆனால் அதே தருணத்தில் குழந்தை பாக்கியம் கிடைத்த சிலர் தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாமல் அரசு காப்பகங்களிலோ, அநாதையாகவே விட்டுவிடுகின்றனர். மேலும் சிலரது குழந்தைகள் பயணத்தின் போதோ அல்லது திருவிழாவிலோ தொலைந்து விடுகிறது.
webdunia photo
WDசமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், தருமபுரியில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி கடந்தாண்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் அதன் பெற்றோரால் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது. ஒருவர் ஜாதகத்தை வைத்தே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அது நிலைக்குமா? என்பதை கண்டறிய முடியுமா?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:தருமபுரியில் ஆயிரம் பெண் குழந்தைகள் அவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டது, இதற்கு கிரக அமைப்புகளே காரணம் (குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றை புறக்கணிப்பது).உலகளவில் பெண் குழந்தை பற்றாக்குறை மிக விரைவில் வரப்போகிறது. இதன் விளைவாக ஹோமோ செக்ஸ் உள்ளிட்ட பல அவலங்கள் தொடரும். இப்போதே பல ஜாதிகளில், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதன் காரணமாக ஜாதி விட்டு ஜாதி திருமணங்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.நம் நாடு புண்ணிய தேசம். சக்தி வீடு. நம் நாட்டின் ராசி கடகம். பெண் ராசி என்பதும் கடகம் தான். தற்போது இந்த கடகத்தில் பாவ கிரகங்கள் தொடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. சந்திரனை ஜோதிட நூல்கள் பெண் கிரகம் என்று கூறுகிறது. அதாவது பெண் தன்மை அதிகம் உள்ள அல்லது பெண்ணாதிக்க கிரகம் என்று கூறலாம். சுக்கிரனும் பெண்ணாதிக்க கிரகமே. கடந்த 2001இல் இருந்து கடக ராசியை சனி சூழ்ந்துள்ளது. வரும் 27-9-2009 முதல் கடகத்தை விட்டு முழுவதுமாக விலகுகிறது. அதன் பிறகு தொட்டிலில் பெண் குழந்தை, அநாதைகளாக விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிரடியாக குறையும். ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் கடந்த காலங்களை விட 2001-2009 வரையிலான காலகட்டத்தில்தான் பெண் குழந்தைகள் புறக்கணிப்பு உயர்ந்திருக்கும்சேலம், தருமபுரி ஆகியவை தொண்ட மண்டலத்திற்கு உரிய பகுதிகள். இவை சனியின் ஆதிக்கத்தில் வருபவை. தற்போது ஏழரைச் சனி நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் தவறான வகையில் பிள்ளைப்பேறு உள்ளிட்ட சில அசிங்கமான நிகழ்வுகளை சனி தனது கெட்ட கதிர்வீச்சின் மூலம் அப்பகுதி மக்கள் மீது செலுத்துகிறார். வரும் 27-9-09க்கு பிறகு பெண் பிள்ளைகளின் அருமை அப்பகுதி மக்களுக்கும் தெரியத் துவங்கும். அதன் பிறகு புறக்கணிக்கப்படும் எண்ணிக்கை குறையும்.குழந்தைப் பிறப்பு பாதிப்பு!ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் குழந்தை ஸ்தானமாகும். ஐந்தாம் இடத்தில் இரண்டு அல்லது மூன்று பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை உருவாகாது. அப்படி உருவானால் தவறாக உருவாகும். நேரடியாகக் கூற வேண்டுமென்றால் கணவராக ஒருவர் இருந்தாலும், ஆனால் குழந்தை வேறு ஒருவருக்கு பிறக்கும்.இந்தப் பையன் ஜாதகத்திற்கு இப்போது அவரது தந்தை உயிருடன் இருக்கக் கூடாதே என்று என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலரிடம் கேட்டுள்ளேன். “நல்லா பார்த்து ஜோசியத்தை சொல்லு” என்று மிரட்டலுடன் கூறுவார்கள். இந்தப் பையன் பிறந்ததற்கு பின்னர் தான் அவரது தந்தை மிகப் பெரியளவில் வளர்ந்துள்ளார், பல சொத்துகளுக்கு அதிபதியானார் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் உண்மையில் விந்தை விட்டவன் எங்காவது நொந்து போய் கிடப்பான் அல்லது இறந்திருப்பான். தற்போது தந்தை என்று கூறப்படுபவர் அக்குழந்தையை பாதுகாவலனாக மட்டுமே இருப்பார். எனவே அப்பெண் கூறினால் மட்டுமே உண்மையான தகப்பன் யார் என்று தெரியும். சில கூட்டு கிரக அமைப்புகள் (அதாவது சுக்கிரன் ராகுவுடன் அல்லது சனியுடன் 5ஆம் இடத்தில் சேர்ந்திருந்தால்) அப்பெண் மாற்றானுக்கு பிள்ளை பெறுவாள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்கள் அமையப் பெற்றால் இதேபோல் நிகழும்.அடுத்ததாக 5வது இடத்தில் கொடிய கிரகங்கள் (செவ்வாய், ராகு, சனி) அமரும்போது அப்பெண் தான் பெற்ற குழந்தையை தூக்கி எறிவாள் என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive