தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்: கலாம் யோசானை

ுதுடில்லி: "லோக்சபா, சட்டசபை மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண் டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கருத் தை, காங்கிரஸ், பாரதிய ஜனதா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள் ளிட்ட முக்கிய கட்சிகள் வரவேற்றுள்ளன.டில்லியில் நடந்த ஐ.பி.என்., 7 வைர மாநில விருதுகள் வழங் கும் விழாவில் கலந்து கொண்ட அப்துல் கலாம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றுதல், பெண்கள் மேம்பாடு, குடிமக்கள் பாதுகாப்பு, நீதி, அடிப்படை கட்டமைப்பு, சுற்றுச்சூழலில் சிறப்பிடம் வகித்த பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் வகித்ததற்காக, கேரள அரசுக்கு விருது வழங் கப்பட்டது. சிறிய மாநிலங்களில், கோவாவுக்கு இவ்விருது கிடைத்தது.அப்போது, ""லோக்சபா, சட்டசபை, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், பதவிக்கு வருவோர், மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்' என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், "கலாம் யோசனை பின்பற்றப் பட்டால், ஆளும் கட்சிகளுக்கு அரசு மேம்பாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.
உடனடி ஆதரவு : மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல், ""இப்பிரச்னையில் மாறுபட்ட கருத்துக்கள் எழாத நிலையில், இதை செயல்படுத்த நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்,'' என்று கூறினார்.இதற்கு உடனடி ஆதரவு தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இந்த நடவடிக் கையை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தேவைப் பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் கூட கொண்டு வரலாம்,'' என்றார்.இதற்கு ஆதரவு தெரிவித்த, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், ""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும்,'' என்று கூறினார்.
""ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, முதல்வர் பதவியை தியாகம் செய்ய முன் வருவோருக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் கூட அளிக்கலாம்,'' என்று, நகைச்சுவையாக குறிப்பிட்டார் லாலு.""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், பதவியை ராஜினாமா செய்யத் தயார்,'' என்று உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரி கூறினார்.
""எனது அரசு ஓராண்டு, ஏழு மாதம் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதாக இருந்தால், நாங்கள் தயார்.இதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகள், எட்டு மாதம் உத்தரகண்ட்டில் மேம்பாட்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடியும்,'' என்றும் கந்தூரி கூறினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive