ுதுடில்லி: "லோக்சபா, சட்டசபை மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண் டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய கருத் தை, காங்கிரஸ், பாரதிய ஜனதா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள் ளிட்ட முக்கிய கட்சிகள் வரவேற்றுள்ளன.டில்லியில் நடந்த ஐ.பி.என்., 7 வைர மாநில விருதுகள் வழங் கும் விழாவில் கலந்து கொண்ட அப்துல் கலாம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, ஏழ்மை ஒழிப்பு நடவடிக்கை, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றுதல், பெண்கள் மேம்பாடு, குடிமக்கள் பாதுகாப்பு, நீதி, அடிப்படை கட்டமைப்பு, சுற்றுச்சூழலில் சிறப்பிடம் வகித்த பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அனைத்து துறைகளிலும் சிறப்பிடம் வகித்ததற்காக, கேரள அரசுக்கு விருது வழங் கப்பட்டது. சிறிய மாநிலங்களில், கோவாவுக்கு இவ்விருது கிடைத்தது.அப்போது, ""லோக்சபா, சட்டசபை, கிராம ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம், பதவிக்கு வருவோர், மேம்பாட்டுப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்' என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், "கலாம் யோசனை பின்பற்றப் பட்டால், ஆளும் கட்சிகளுக்கு அரசு மேம்பாட்டு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்' என்று தெரிவித்துள்ளனர்.
உடனடி ஆதரவு : மத்திய உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல், ""இப்பிரச்னையில் மாறுபட்ட கருத்துக்கள் எழாத நிலையில், இதை செயல்படுத்த நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்,'' என்று கூறினார்.இதற்கு உடனடி ஆதரவு தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இந்த நடவடிக் கையை ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தேவைப் பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் இது தொடர்பாக திருத்தம் கூட கொண்டு வரலாம்,'' என்றார்.இதற்கு ஆதரவு தெரிவித்த, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், ""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும்,'' என்று கூறினார்.
""ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, முதல்வர் பதவியை தியாகம் செய்ய முன் வருவோருக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் கூட அளிக்கலாம்,'' என்று, நகைச்சுவையாக குறிப்பிட்டார் லாலு.""இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், பதவியை ராஜினாமா செய்யத் தயார்,'' என்று உத்தரகண்ட் முதல்வர் பி.சி.கந்தூரி கூறினார்.
""எனது அரசு ஓராண்டு, ஏழு மாதம் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதாக இருந்தால், நாங்கள் தயார்.இதன் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகள், எட்டு மாதம் உத்தரகண்ட்டில் மேம்பாட்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த முடியும்,'' என்றும் கந்தூரி கூறினார்.
ஒரே நேரத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தல்: கலாம் யோசானை
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, September 24, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment