தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பெய்தும் கெடுக்கும

டந்த வாரத்தில் ஒரிசா, அசாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சுமார் 360 கிராமங்களில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.



ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசாவில் ஜலேகா, பாலாசூர் உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.


இயற்கையின் வரப்பிரசாதமான மழை அதிகம் பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களின் விவசாயிகள் பயிரிடவும் பயிர்களை காக்கவும் இன்றும் வானத்தையும், நதிகளையும் வெறித்து பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அளவுக்கு மீறி பெய்யும் பருவ மழையால் அஸ்சாம், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதமடைகின்றன.

நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சில சமயங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட வறட்சியான மாநிலங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை, தேக்கி வைக்க இடம் இல்லாததால் தேவையில்லாத சேதங்களை ஏற்படுத்திவிட்டு யாருக்கும் பயனில்லாமல் கடலில்தான் விழுகிறது.


இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆறுகளான கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா, நர்மதை, கோதாவரி, காவேரி உள்ளிட்ட பல்வேறு கிளை நதிகள், மற்றும் பருவமழை மூலம் இந்திய துணை கண்டத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 1869 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் கிடைக்கிறது. ஆனால் இதில் நாம் 40 சதவீத நீரை மட்டும்தான் பயன்படுத்த முடியும். மீதியுள்ள சுமார் 60 சதவீத நீர் வெள்ளசேதத்தை ஏற்படுத்திவிட்டு வீணாக கடலில் கலக்கிறது.


2000ம் ஆண்டு பெய்த பருவமழையால் ஏற்பட்ட சேதமதிப்பு ரூ. 13,110 கோடி என சி.டபுள்யூ.சி தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வெள்ளத்தால் சேதமடைவதாகவும் அதன் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க ஒரே வழி தேசிய நதிகளை இணைக்கும் திட்டம்தான்.

இமயமலைத் தொடரில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீரை கொண்டு வரும் கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளை, பருவமழையை மட்டுமே நம்பியுள்ள காவேரி, கேதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளுடன் இணைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு அதிக சாத்தியக்கூறு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆறுகள் மூலம் குளம், ஏரிகளை இணைத்து அனைத்து கிராமங்களிலும் முப்போகம் விளைய வைத்தால் இந்தியா உணவு உற்பத்தியில் மட்டுமல்லா அனைத்து துறைகளிலும் உண்மையாக ஒளிரும்.


தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் ஆங்கிலேயர் காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. 1839ம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்பவர் முதன்முதலில் விரிவான திட்டத்தை தயார் செய்தார். பின் 1972ம் ஆண்டு டாக்டர் கே.எல். ராவ் என்பவர் 2640 கிலோ மீட்டர் நீளத்திற்கான கங்கை காவேரி இணைப்பு குறித்து பரிந்துரை செய்தார். 10 லட்சம் ஹெட்டேர் நிலம் நீர்பாசன வசதி பெறும் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 12,500 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது.


சில ஆண்டுகளில் கேப்டன் தஸ்தூர், ஹிமாலயக் கால்வாய் மற்றும் பூமாலைக்கால்வாய் என்ற இரண்டு திட்டங்கள் மூலம் தென்னக, வட இந்திய நதிகளை இணைக்க மதிப்பீடு செய்தார். 13,500 கி.மீட்டர் கால்வாய் மூலம் இந்திய நதிகளை இணைக்கும் போது பெறப்படும் பலன்கள் குறித்து சி.டபுள்யூ.சி யுடன் (சென்டர் வாட்டர் கமிஷன்) இணைந்து பல்வேறு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகள் செலவானாலும், மின் உற்பத்தி, போக்குவரத்து, வெள்ள சேதம் ஆகியவற்தை கணக்கிடும்போது சில வருடங்களிலேயே செலவுத்தொகையை பெறமுடியும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறை சிக்கல், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
ஆனால், இன்று நாம் வீணாக்கும் தண்ணீர் எதிர்காலத்தில் நிச்சய தேவையாக மாறுகிறது.


இந்திய மக்கள் தொகை 2050ல் 150 முதல் 180 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2000 லட்சம் டன் தானிய உற்பத்தியை 4500 லட்சம் டன்னாகவும், 1400 லட்சம் ஹெட்டேர் விளை நிலத்தை 1600 லட்சம் ஹெட்டேராகவும் மாற்ற வேண்டியுள்ளதால் நீரின் தேவை மிகவும் அவசியமாகிறது.


இந்தியாவிற்கு 2050ஆம் ஆண்டில் குடிநீர், பொதுமக்கள் உபயோக தேவைக்கு மட்டும் ஆண்டுக்கு 102 பிசிஎம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) தண்ணீர் தேவைப்படும். விவசாயத்திற்கு 1072 பிசிஎம் தண்ணீரும், தொழிற்சாலைகளுக்கு 63 பிசிஎம் தண்ணீரும் மற்றவைகளுக்கு 210 பிசிஎம் என 1447 பிசிஎம் தண்ணீர் தேவைப்படுவதாக சி.டபுள்யூ.சி. சர்வே தெரிவித்துள்ளது. எனவே நதிநீர் இணைப்பு திட்டத்தை தற்போது ஒத்தி வைத்தாலும் எதிர்கால நோக்கில் தவிர்க்கமுடியாது.


அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் நாட்டில் வெள்ளத்தை ஏற்படுத்திய நதிகளை மற்றொரு நதிகளுடன் இணைத்து நீர்வழிப் போக்குவரத்தையும் பாசன வசதியையும் ஏற்படுத்திக்கொண்டு தன்னிறைவு அடைந்துள்ளன.
இந்தியா 2020 ல் வல்லரசாகும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு தேசிய நதிகளை இணைப்பதன் மூலமே நனவாகும்.



நதிகளை இணைப்பின் முக்கிய பயன்கள்


1. வறட்சியில் இருந்து பெரும்பாலான மாநிலங்களை காப்பாற்ற முடியும்.
2. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் வெள்ள சேதத்தை தடுக்க முடியும்.
3. குடிநீர் பற்றாக்குறை தீரும்.
4. போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட தூரங்களுக்கு செல்லும் சரக்குகளை குறைந்த செலவில் அனுப்ப முடியும். கடல் பயணங்களுக்கு உறுதுணையாக விளங்கும்.
5. மீன் பிடி தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
6. சுற்று புற சூழல் பாதுகாக்கப்படும்.
7. நாட்டின் உள்கட்டமைப்புகள் வளர்ச்சி பெரும்.
8. நதியோரங்களில் உள்ள கிராமங்கள் வளர்ச்சிபெறும்.
9. 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி.
10. விவசாய நிலங்கம், வனப்பகுதிகளை அதிகரிக்கலாம்.



தமிழகத்தின் சிறப்பு


கி.பி. 905-920ம் ஆண்டில் பாண்டிய மன்னன் ராசசிம்மன் காலத்தில்தான் முதல் நதிநீர் இணைப்பு நடந்துள்ளது. வைகை நதியையும் சருகணியாற்றையும் ராசசிங்கமங்கலம் ஏரிமூலம் இணைத்துள்ளான். 1895ம் ஆண்டு கட்டப்பட்ட பெரியாறு திட்டமே உலகில் முதலாவது பெரிய நதிநீர் இணைப்புத்திட்டமாக கருதப்படுகிறது. இதே போல், பாலாறும் கொற்றையாறும் காவிரியும் வெள்ளாறும், கோதையாறும் பழையாறும் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்திரமாநிலம் காக்கிநாடாவில் இருந்து தமிழகத்தின் மரக்காணம் வரை வெட்டப்பட்ட பக்கிங்காம் கால்வாய் 1878 ஆண் ஆண்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இது தேசிய நீர்வழிப்பாதை 4 என்று அழைக்கப்பட்டது. தற்போதும் ஆந்திராவின் வெள்ளவடிகாலாக இக்கால்வாய் உள்ளது.



கட்டுரையாளர் : திரு.தரணிபாபு

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive