ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) அமைப்பிடம் குவிந்துள்ள நிதியில் ரூ.29 ஆயிரம் கோடி மட்டும், தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு தரப்பட உள்ளது.
இந்த பணத்தை எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ புரூடென்சியல், ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஆகிய சொத்து மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவை நிர்வகிக்க உள்ளன. பி.எப். பணத்தை இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை மற்றும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளன.
இந்த 4 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தவிர மீதியுள்ள 3 நிறுவனங்களை கிரைசில் அமைப்பு தேர்வு செய்திருந்தது. ரிலையன்ஸ் கடைசியாக சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.29 ஆயிரம் கோடியை இந்நிறுவனங்களுக்கு தரும் பணி திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. ஒரே நாளில் இவ்வளவு பணத்தையும் தர முடியாது என்பதால், அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய தொகையை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தை பெற்ற அதே நாளில், இந்த 4 நிறுவனங்களும் முதலீடு செய்ய வேணடியது கட்டாயம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு பணம் தரப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பி.எப் பணம் : 29,000 கோடி தனியாருக்கு தாரை வார்ப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Monday, October 6, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment