சுவா பாலோ: பிரேசில் நாட்டில் உள்ள கெர்க்கிஸ் ஆராய்ச்சி மையத் தில் உள்ள நிபுணர்கள் ஆண் மலட்டுத் தன்மை போக்குவது குறித்து ஆராய்ச்சி மேற் கொண்டனர். சுண்டெலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: சுண்டெலிகளின் பற்களின் இடையே உள்ள சதைப்பகுதியில் இருந்து முதலில் திசுக்களை எடுத் தோம். எலிகளை பொறுத்தவரை, பற்களில் இந்த பகுதியில் தான் அதிக அளவு ஸ்டெம் செல் கிடைக்கிறது. அந்த வகையில், எங்களின் அடுத்த முயற்சியாக , சுண் டெலியின் பல் பகுதியில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, அதை ஆண் எலியின் இன விருத்தி உறுப்பில் செலுத்தினோம். இப்படி செலுத்திய பின், அந்த சுண் டெலியை கண்காணித் தோம். அதில் இருந்து விந்து வை அது உற்பத்தி செய்தது. ஆண்களின் விந்துக்கு ஈடாக இவற்றின் விந்து இருக்கிறது. எலிகளுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதிக அளவு ஸ்டெம் செல் பரவி இருக்கிறது. இதயம் முதல் மூளை தசைகள் வரை எங்கும் ஸ்டெம் செல் எடுக்க முடியும். இந்த விந்தை பயன்படுத்தி, கருமுட்டையை உருவாக்க முடியும் என்பதையும் பரிசோதனையில் இருந்து கண்டுபிடித்துள்ளோம். மனிதர்களுக்கும் இதை செலுத்தி செயற்கை கருவூட்டலுக்கு வழி செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். எலியின் கருப்பையில் இருந்தே விந்தை கருமுட்டையாக மாற்றி, வாடகைத்தாயின் கருவில் பொருத்தவும் முடியும். அதற்கும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆண் மலட்டுத் தன்மையை போக்க மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் முதன் முறையாக சுண்டெலிகளும் இதற்கு உதவும் என்பது இப்போது தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
நன்றி தினமலர்
ஆண் மலட்டுத்தன்மை போக்க கைகொடுக்குது சுண்டெலி
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 7, 2008
Labels: மருவத்துவ செய்திகள்

0 comments:
Post a Comment