தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

குமுதத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் சுர்ர்ர்.....பேட்டி

முன்பைவிட இன்னும் தெம்பாகவும், நம்பிக்கையுடனும் பேசுகிறார், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த். அவ்வப்போது அவருக்கேயுரிய நமட்டுச் சிரிப்பு!
தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப் பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்தப் பேச்சு ஏற்கெனவே வந்துவிட்டது என்று ராமதாஸ் சொல்கிறார். பழைய கேஸட் என்கிறார். கலைஞரும் அதை மறுக்கவில்லை. இப்போது ஏன் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது என்று புரியவில்லை. அப்பவே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அவர்களுக்குள் நடக்கும் சண்டை. அதற்குமேல் அவர்கள் கட்சியைப் பற்றிப் பேச விரும்பவில்லை.''
அரசியலில் எளிமை, தூய்மைபற்றி அதிகம் பேசுகிறீர்கள். நீங்கள் கட்சிக் கூட்டங்களுக்குப் போகும்போது ஒரு கிலோ மீட்டருக்கு ட்யூப் லைட் போட்டு பெரிய பெரிய கட்அவுட்கள் வைக்கிறார்கள். பொதுமக்கள் கரண்டில் கொக்கி போடுகிறார்கள்.மற்ற கட்சிகள் செய்கிற ஆடம்பரத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்?
``பப்ளிக் கரண்ட் எடுக் கிறோம் என்பதை மட்டும் திருத்திக்கொள்ளுங்கள்.ஆளுங்கட்சிக்காரர்கள் வேண்டுமானால் செய்வார்கள். நாங்கள் நிச்சயம் அப்படிச் செய்வதில்லை. பேனர், கட்_அவுட் விஷயத்தில் ஆளுங்கட்சிக்காரர்கள் ஏன் அவ்வளவு செய்கிறார்கள்? அப்புறம் அடுத்தவன் செய்யமாட்டானா?''
ஆளுங்கட்சிக்கு கடிவாளமாக இருக்க வேண்டிய ஓர் எதிர்க்கட்சியின் தலைவி, இரண்டு மாதமாக கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது சரியா?
``ஸ்டாலின் எப்படி பாங்காக், லண்டன் என்று சொல்லிக் கொள்ளாமல் போனாரோ அது மாதிரிதான்! அது என்னவென்று தெரிந்தால்தான் இதைப் பற்றியும் சொல்லமுடியும். டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு மந்திரி போகலாமா? எதற்குப் போனார் என்று அரசாங்கமே சொல்லாதபோது எதற்கு அந்தக் கட்சித் தலைவி பற்றிப் பேசுகிறீர்கள்? புரோட்டோகால் என்று ஒன்று இருக்கிறதே. அதை தரவே இல்லை இந்த அரசு. கேட்டால் சொந்தக் காரணங்களுக்காகப் போனார் என்கிறார்கள். சொந்தக் காரணம் என்றால், அப்புறம் ஏன் டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் போகிறார்? போகக்கூடாது என்கிறார்கள்! டெல்லியிலிருந்து ஒரு கட்சியை இந்தியா முழுக்க நடத்தும்போது, கொட நாட்டுலேர்ந்து நடத்தக்கூடாதா?''
சமீபத்தில் கலைஞர் செய்த பெரிய தவறு என்று எதைச் சொல்வீர்கள்?
``விலைவாசி உயர்வைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரே அதுதான் பெரிய தவறு. தேர்தலில் ஜெயிக்கிறதை மட்டும்தான் பேசறார். மக்கள் அவதியைப் பற்றிப் பேசுவதே இல்லை. நான்கு விழாக்களுக்குப் போக வேண்டும், அங்கு போய் அதை நடணும். இங்கு போய் இதை நடணும். உடனே நதிகளை இணைக்கிறேன் என்று பேசுகிறார். டெல்லிக்குப் போகிறேன் என்கிறாரே எதற்கு? கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப் போகிறாரே தவிர, மக்கள் பிரச்னைகளை பேசவா போகிறார்? உடனே இதைப் படித்துவிட்டு மக்கள் பிரச்னைக்குத்தான் போகிறேன் என்று இரண்டாவது நாளே அறிக்கை தருவார்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை இவர் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் விலையைக் குறைச்சதும் ரொம்பக் குறைவு! சாதாரண டீசல் கிடைக்கவே இல்லை. வேலூர் போறேன்... வழியெல்லாம் நிற்கிறது லாரிகள் டீசல், பெட்ரோல் கிடைக்காமல். அவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்களே என் கிற பொறுப்பு கூட முதல்வருக்கு இல்லை! அவருக்கு சுயநலம்தான் முக்கியம்.''
தே.மு.தி.க.வில் உங்கள் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதே... எங்கு பார்த்தாலும் `அண்ணியாரே வருக...' என்று போஸ்டர்கள்?
``என்னால் போக முடியாமல் போகிறபோது அவர் போகிறார். அப்போது முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருக்கும். மனைவி வேண்டாம் என்று சொன்னாலும் கட்சிக்காரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரச் சொல்லிவிட்டு மனைவியை ஃபோகஸ் செய்வது தப்பு என்றால் எப்படி?''
கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டாலும், அடுத்தது என்ன என்பதில் ஒருவித குழப்பத்தில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறதே?
``எந்தவித குழப்பமும் இல்லை... தெம்பாகத்தான் இருக்கிறேன். மாயாவதியோ, எடியூரப்பாவோ எப்படி ஜெயித்தார்கள்? கூட்டணி பலத்திலா?நாங்கள் என்ன சொல்கிறோமோ,தீர்மானம் நிறைவேற்றுகிறோமோ அதைத்தான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது. எங்கள் தீர்மானங்களை இடம் மாற்றி தங்களுடையதாகப் போடுகிறார்கள். `நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்' என்றால் தங்கம் தென்னரசு கிண்டலடிக்கிறார்! அண்ணா சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருது. கட்சி என்றால் அது ஆட்சியைப் பிடிக்கத்தான். பெட்டைக் கோழி என்றால் அது முட்டையிடத்தான்!''.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive