தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

புதுமையை வரவேற்போம்

சுப்ரமணியபுரம்
காதலையும், வீரத்தையும் சொல்லி பழகிய தமிழ்சினிமாவுக்கு இந்த புதியவர்கள் காட்டியிருக்கிற துரோகம் புதுசு. நாம் ஏதோ ஒரு கதையை யூகித்து அமர, 'அரைச்ச மாவு' ஆட்கள் நாங்கள் இல்லையென்று வேறு திசையில் கதையை விரட்டி, ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சசிக்குமார். பாலா, அமீருடைய வளர்ப்பு! அதை சொல்லாமலே புரிந்து கொள்ள வைக்கிறார் படம் நெடுகிலும்.
சுப்ரமணியபுரத்தில் தறுதலையாக திரிகிற ஐந்து நண்பர்களின் கதை. இதில் ஜெய் மட்டும் பெரிய வீட்டு பிள்ளையான ஸ்வாதியை காதலிக்க, ஸ்வாதியின் குடும்பத்தால் ஐந்து நண்பர்களும் என்னாகிறார்கள் என்பது மீதி. முதல் பாதியில் காதலும் கலகலப்புமாக நகர்கிற கதை, இரண்டாம் பாதியில் அரிவாளும் ரத்தமுமாக திசைமாறும் போது கலங்கிப் போகிறார்கள் ரசிகர்கள்.
மனசுக்குள் அப்படியே ஒட்டிக் கொள்கிறார் ஸ்வாதி. அந்த அகலவிழி பார்வையும், அசர வைக்கும் சிரிப்பும் மனதை விட்டு அகலவே நாட்கள் பிடிக்கும். திருட்டுப்பார்வையிலிருந்து பிரமோஷன் ஆகி, நான் உங்ககிட்ட பேசணும் என்று போகிற போக்கில் ஜெய்யை அழைக்கிற காட்சியில் அசரடிக்கிறார். தன் கண்ணெதிரிலியே நடக்கும் அந்த சம்பவமும், அவர் அலறுகிற காட்சியும் மனதை பிசைகிற பயங்கரம்.
படம் முழுக்க இறுகிய முகத்தோடு உலா வரும் சசிக்குமாரை மலர்ந்த முகத்தோடு வரவேற்பார்கள் ரசிகர்கள். இவர்தான் இயக்குனர் என்றாலும், தேவைக்கு மிகாமல் தனது பாத்திரத்திற்கு 'பாத்தி' கட்டியிருப்பதை பாராட்டலாம். நண்பனின் கொலைக்கு காரணமான சமுத்திரக்கனியை வெறித்தனமாக சசிக்குமார் கொலை செய்கிற காட்சியை எப்படி சென்சார் அனுமதித்ததோ? நண்பன் கொலையுண்ட இடத்தில் சமுத்திரக்கனியின் தலையை போட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கையில் சிலிர்த்துப் போகிறது.
சைக்கிள் கடை சித்தனுக்காக கஞ்சா கருப்பு மெனக்கெடும் காட்சிகள் சிரிப்பு தோரணம். சீரியல் செட் ஆர்டர் எதிராளிக்கு போன ரகசியத்தை, கருப்பு கண்டுபிடிக்கையில் தியேட்டரே சிரித்து சின்னாபின்னமாகிறது. இப்படியெல்லாம் சிரிக்க வைக்கிற கருப்பு, கடைசியில் ரசிகர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார். குணச்சித்திர வேடம் தெரியும். கருப்பு இந்த படத்தில் செய்திருப்பது துர்குணச்சித்திர வேடம்.
சமுத்திரக்கனியின் பதட்டமில்லாத வில்லத்தனத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு இந்த ஐவர் கோஷ்டியை போட்டுக் கொடுக்கும் இவர், கடைசியில் நைசாக பேசி, ஜெய், சசியை கொலைகாரர்களாக்குவது நரித்தந்திரம். ஆசைப்பட்டால், வில்லனின் நாற்காலியை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம் சமுத்திரக்கனி.
அந்த ஊனமுற்ற இளைஞன் 'ஸ்டடியான' நடிப்புக்கும் ஒரு பலே! குறிப்பாக யுத்தகளத்தில் தானும் எறிந்து நண்பனுக்கும் சோடா பாட்டில் உதவி செய்கிறாரே, நெத்தியடி!
ஒளிப்பதிவில் ஒரு புது பாதை வகுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சுதிர். கஞ்சா கருப்பு நடந்து வரும் அந்த நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது அறிமுகத்தை துவக்கி வைக்கிற கேமிரா, அதே நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது முடிவையும் சொல்வது புதுசு.
ஜேம்ஸ் வசந்தன் இசை காதுகளுக்கு சுகம். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதால், பின்னணியில் இளையராஜாவின் பாடல்களை தாலாட்ட விட்டிருக்கிறார்கள். அதுவே நிறைவு. பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஆர்ட் டைரக்டர். இவர் காட்டியிருக்கும் 80-ம் வருடம் காலச் சக்கரம் மட்டுமே செய்யக்கூடிய அற்புதம்.
சில 'வரவு'கள் தமிழ்சினிமாவின் சொத்து! அதில் சசிக்குமாரையும் சேர்க்கலாம்... தாராளமாக!

நன்றி
தமிழ் சினிமா.காம்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive