தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பில் பலியானோர்க்கு அஞ்சலி

இந்த குண்டு வெடிப்பில் பலியான குடும்பத்திற்க்கு
நம் இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். மேலும்இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகள்இதற்கு துணை போகும் நபர்கள் போன்றோரைஅரசு உடனுகுடன் தூக்கிலிட வேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் அதை விடுத்து அவர்களை விருந்தினர் போல் நடத்தும்வெட்கங்கெட்ட நிலை மாற வேண்டும்.

மத்திய அரசு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தைமறந்துவிட்டு ஆட்சியை காப்பாற்ற யாருக்கு எத்தனை கோடி கொடுத்தோம் என்பதை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது.
நாட்டுக்காக செயல்படவேண்டிய உளவுத்துரைஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்காகசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது.எதிர்கட்சி ஆளுங்கட்சியை பற்றி கூறும் விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் ஆளுங்கட்சியினருக்கு அனுப்பும் ஒரு தபால் துறையைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
கருணை காட்டவேண்டும் யாருக்கு மனிதர்களுக்குதானே தவிர தவிர இது போன்ற மனித உரு கொண்ட மிருகங்களுக்கு அல்ல ஆனால் மத்திய அரசு இன்னும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையேகடைபிடித்துக்கொண்டு வருகிறது
நடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி "அப்சல்குரு"வை தூக்கில் போடாமல் இன்னும் அவனுக்கு விருந்து வைத்துக்கொண்டுள்ளோம் இது மானக்கேடான விஷயமில்லையா?
நாம் இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் இது போன்ற செயல்களில்ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க இயலாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்க்குசிறிதளவேயினும் பயம் ஏற்ப்பட வேண்டுமெனில்நம் சட்டங்கள் கடுமையானதாக மாற்றியமைக்கப்படவேண்டும்.
தீவிரவாதசெயலுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்படவேண்டும்இல்லையென்றால் விரைவில் அனைத்து நாடுகளும் இதற்க்கான இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை
தீவிரவாதத்துக்கு துணைபோகும், அவர்களுக்குஉதவும் நாடுகளுக்கு கடும் நிபந்தனைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஒன்றினைந்து செயல்பட்டாலன்றி தீவிரவாதம் எனும் கொடிய அரக்கனை அழிக்க இயலாது .

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive