இந்த குண்டு வெடிப்பில் பலியான குடும்பத்திற்க்கு
நம் இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். மேலும்இது போன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகள்இதற்கு துணை போகும் நபர்கள் போன்றோரைஅரசு உடனுகுடன் தூக்கிலிட வேண்டும் அதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் அதை விடுத்து அவர்களை விருந்தினர் போல் நடத்தும்வெட்கங்கெட்ட நிலை மாற வேண்டும்.
மத்திய அரசு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு விஷயத்தைமறந்துவிட்டு ஆட்சியை காப்பாற்ற யாருக்கு எத்தனை கோடி கொடுத்தோம் என்பதை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது.
நாட்டுக்காக செயல்படவேண்டிய உளவுத்துரைஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்காகசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது.எதிர்கட்சி ஆளுங்கட்சியை பற்றி கூறும் விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் ஆளுங்கட்சியினருக்கு அனுப்பும் ஒரு தபால் துறையைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
கருணை காட்டவேண்டும் யாருக்கு மனிதர்களுக்குதானே தவிர தவிர இது போன்ற மனித உரு கொண்ட மிருகங்களுக்கு அல்ல ஆனால் மத்திய அரசு இன்னும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையேகடைபிடித்துக்கொண்டு வருகிறது
நடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி "அப்சல்குரு"வை தூக்கில் போடாமல் இன்னும் அவனுக்கு விருந்து வைத்துக்கொண்டுள்ளோம் இது மானக்கேடான விஷயமில்லையா?
நாம் இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் இது போன்ற செயல்களில்ஈடுபடுவோரை உடனடியாக தண்டிக்க இயலாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்க்குசிறிதளவேயினும் பயம் ஏற்ப்பட வேண்டுமெனில்நம் சட்டங்கள் கடுமையானதாக மாற்றியமைக்கப்படவேண்டும்.
தீவிரவாதசெயலுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்படவேண்டும்இல்லையென்றால் விரைவில் அனைத்து நாடுகளும் இதற்க்கான இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை
தீவிரவாதத்துக்கு துணைபோகும், அவர்களுக்குஉதவும் நாடுகளுக்கு கடும் நிபந்தனைகளை உலக நாடுகள் விதிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நாம் ஒன்றினைந்து செயல்பட்டாலன்றி தீவிரவாதம் எனும் கொடிய அரக்கனை அழிக்க இயலாது .
பெங்களூர், அகமதாபாத் குண்டு வெடிப்பில் பலியானோர்க்கு அஞ்சலி
Posted by
தமிழ்க்குமரன்
Sunday, July 27, 2008
Labels: விமர்சனம்

0 comments:
Post a Comment