தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அமெரிக்காவை விட்டு ஐரோப்பாவில் இன்போசிஸ் தீவிர கவனம்

பெங்களூரு: அமெரிக்காவை நம்புவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் சாப்ட்வேர் பணிகளை செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இன்போசிஸ் தீவிரமாக உள்ளது.அமெரிக்காவில் உள்ள வங்கிகள், இன்சூரன்ஸ், நிதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் சேவைகளை இந்தியாவில் உள்ள டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்து தருகின்றன.சமீப காலமாக, அமெரிக்காவின் டாலர் கரன்சிக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு டாலருக்கு 50 ரூபாய் மாற்று மதிப்பு கிடைத்து வந்தது போய், இப்போது 40 ரூபாய் தான் கிடைக்கிறது.
இதனால், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வருவாயில் கடும் அடி விழுந்தது. நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் சில மூடப்பட்டு விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.முன்னணி நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இழப்பு நேர்ந்தாலும் சமாளித்து வருகின்றன. இழப்பை சமாளிக்க, ஊழியர்கள் சம்பளத்தில் கைவைத்துள்ளன; சலுகைகளை ரத்து செய்துள்ளன.சாப்ட்வேர் நிறுவனங்கள் பார்வை இப்போது அமெரிக்க நிறுவனங்களிடம் டாலராக வாங்குவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் பவுண்ட் கரன்சி மூலம் வருவாய் ஈட்டுவதில் திரும்பியுள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் சாப்ட்வேர் ஊழியர்களும், அமெரிக்கா போவதை விட, ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இதற்கு காரணம், ஒரு பவுண்ட் கரன்சிக்கு 80 ரூபாய் கிடைப்பது தான்.சாப்ட்வேர் நிறுவனங்களை பொறுத்தவரை, அதிக வருவாய் கிடைப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வாய்ப்பு உள்ளது தான்.இந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம், அமெரிக்காவில் கணிசமான அளவில் சாப்ட்வேர் பணிகளை செய்து தந்து கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பணிகளில் 60 சதவீதம், அமெரிக்க நிறுவனங்களை சார்ந்தது.ஆனால், இப்போது இவற்றில் 40 சதவீத சேவைகளை புதுப்பிக்காமல், ஐரோப்பிய நாடுகளில் சேவை செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறது. "நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயில் அமெரிக்காவின் பங்கு 63 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து 27 சதவீத வருவாய் கிடைத்தது. இதை 40 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் சாப்ட்வேர் சந்தையில், கூடுதலாக 20 சதவீத சேவைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்று இதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive