இந்த டைட்டில் வேற எதுக்கோன்னு நெனைக்காதீங்க குண்டு வைக்க போவதில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கு
பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவம்,"ரா' என்னும் உளவுப் படை ஆகியவற்றிடமிருந்து மத்திய உளவுத் துறைக்கு, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்' ல் மதுரையிலுள்ள புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


0 comments:
Post a Comment