தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஹிட் லிஸ்ட்டில் மீனாட்சியம்மன் கோவில்


இந்த டைட்டில் வேற எதுக்கோன்னு நெனைக்காதீங்க குண்டு வைக்க போவதில் ஹிட் லிஸ்ட்டில் இருக்கு

பாக்., ஐ.எஸ்.ஐ.,யின் ஆதரவு இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடத்தில் உள்ளது என்ற திடுக்கிடும் தகவல், மத்திய உளவுத் துறை தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள ரகசிய "பேக்ஸ்' அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய ராணுவம்,"ரா' என்னும் உளவுப் படை ஆகியவற்றிடமிருந்து மத்திய உளவுத் துறைக்கு, இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் "ஹிட் லிஸ்ட்' ல் மதுரையிலுள்ள புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய உளவு துறை டி.ஜி.பி., பி.சி.ஹல்தார் தமிழக போலீஸ் டி.ஜி.பி., கே.பி.ஜெயினை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, மத்திய அரசின் கவலையை வெளியிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தமிழக முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி விவாதித்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவார்.தன்னுடைய ரகசிய "பேக்ஸ்' அறிக்கைகள் மீது தமிழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, பூந்தமல்லியில், வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தது பற்றி, மாநில அரசுக்கு உளவுத் துறை தகவல் அளித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் உளவுத் துறை தரும் இது போன்ற தகவல்கள் மீது போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் தகவல் தொழில் நுட்ப மையங்களாக உள்ளன. ஆனால், மத ரீதியிலான தாக்குதலுக்கு சென்னை நகரை தங்களது, "ஹிட் லிஸ்ட்'டில் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். பெங்களூரு வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கும்படி தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive