தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

சென்னைக்கு ரெட் அலர்ட்: எல்லைகள் 'சீல்'

தென் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில், அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகம் இடம் பெற்றுள்ளது."மதவாத பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'என, தமிழக அரசுக்கு மூன்று எச்சரிக்கை கடிதங்களை மத்திய அரசு அனுப்பியது.மாநிலத்தின் அபரிமிதமான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் ஏற்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்க பயங்கரவாதிகள் ஐ.டி., நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
பெங்களூரு, ஆமாதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் அடுத்த குறி சென்னையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல், மத்திய உளவுத் துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்துள்ளது.சென்னையில் அமெரிக்கா ஐ.டி., நிறுவனங்கள், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் டைடல் பார்க், டைசல் பார்க், அன்ட்டஸ், நேஷனல் டேட்டா சென்டர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா, எழும்பூரில் அல்சாமால், ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வணிக வளாகத்திலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டுகள் உள்ளதா என்ற சோதனை நடந்து வருகிறது.அரசு பொது மருத்துவ மனை, கோயம்பேடு மட்டுமின்றி, வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
சென்னை நகரில் முக்கிய ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்த கணக்கெடுப்பில் உள வுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி யம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள 17 முக்கியமான கோவில்களுக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் போக்குவரத்து உள்ளது. தரைக்கு மேல் செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநகரில் புதியதாக கட் டப்பட்டுள்ள 20 மேம்பாலங்கள் மற்றும் சாஸ்திரி பவன் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள், அண்ணா சாலை யில் உள்ள அமெ ரிக்க தூதரகம் உட்பட பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு அளிக் கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"வேறு மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், விமானம், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப் புள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போலீஸ் பாது காப்பு அதிகமாக உள்ள நகர் ப்பகுதியில் பயங்கர வாதிகள் தங்குவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கோவில் மண்டங்களை பயன் படுத்தும் வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய சைக்கிள்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கும் சைக்கிள்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, மண்ணடி, பாரிமுனை, கொடுங்கையூர், பெரம்பூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பொது மக்களுடன் எளிதாக ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive