தென் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில், அமைதி பூங்காவாக விளங்கும் தமிழகம் இடம் பெற்றுள்ளது."மதவாத பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'என, தமிழக அரசுக்கு மூன்று எச்சரிக்கை கடிதங்களை மத்திய அரசு அனுப்பியது.மாநிலத்தின் அபரிமிதமான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் ஏற்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்க பயங்கரவாதிகள் ஐ.டி., நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
பெங்களூரு, ஆமாதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளின் அடுத்த குறி சென்னையாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல், மத்திய உளவுத் துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்துள்ளது.சென்னையில் அமெரிக்கா ஐ.டி., நிறுவனங்கள், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் டைடல் பார்க், டைசல் பார்க், அன்ட்டஸ், நேஷனல் டேட்டா சென்டர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா, எழும்பூரில் அல்சாமால், ராதாகிருஷ்ணன் சாலையில் சிட்டி சென்டர் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வணிக வளாகத்திலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டுகள் உள்ளதா என்ற சோதனை நடந்து வருகிறது.அரசு பொது மருத்துவ மனை, கோயம்பேடு மட்டுமின்றி, வெளிநாட்டினர் தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
சென்னை நகரில் முக்கிய ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்த கணக்கெடுப்பில் உள வுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சி யம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள 17 முக்கியமான கோவில்களுக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை மேம்பால ரயில் போக்குவரத்து உள்ளது. தரைக்கு மேல் செல்லும் ரயில் தண்டவாளத்தைக் கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநகரில் புதியதாக கட் டப்பட்டுள்ள 20 மேம்பாலங்கள் மற்றும் சாஸ்திரி பவன் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள், அண்ணா சாலை யில் உள்ள அமெ ரிக்க தூதரகம் உட்பட பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்பு அளிக் கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"வேறு மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், விமானம், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப் புள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போலீஸ் பாது காப்பு அதிகமாக உள்ள நகர் ப்பகுதியில் பயங்கர வாதிகள் தங்குவதில்லை. நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கோவில் மண்டங்களை பயன் படுத்தும் வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் சந்தேகத்திற்கிடமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய சைக்கிள்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கும் சைக்கிள்களை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அகற்றவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் திருவல்லிக்கேணி, மண்ணடி, பாரிமுனை, கொடுங்கையூர், பெரம்பூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் பொது மக்களுடன் எளிதாக ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னைக்கு ரெட் அலர்ட்: எல்லைகள் 'சீல்'
Posted by
தமிழ்க்குமரன்
Sunday, July 27, 2008
Labels: செய்திகள்

0 comments:
Post a Comment