தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பாக்.கை தாக்க மாட்டோம், ஆனால் ... - பிரணாப் எச்சரிக்கை

பாகிஸ்தானை தாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை. ஆனால் பாகிஸ்தானிடமிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில்,

மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு உள்ளது. ஆனால் இதற்காக பாகிஸ்தானை தாக்குவது தீர்வாகாது. அந்த எண்ணமும் இந்தியாவிடம் இல்லை. அதேசமயம், தனது மண்ணில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்பட வேண்டும். இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.

நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் பேசி மிரட்டியதாக அங்கிருந்து வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இது நாட்டை திசை திருப்ப முயலும் செயலாகும். தேவையில்லாமல், அந்நாட்டு ராணுவத்தை உஷார்படுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு
இன்னொரு நாட்டுத் தலைவருடன் போனில் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே நேரம் பெறப்பட வேண்டும். பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி நடைமுறைகள் உள்ளபோது தேவையில்லாமல் நான் சர்தாரியை மிரட்டியதாக பாகிஸ்தான் வதந்தி கிளப்பி விட்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்.

பாகிஸ்தானைத் தாக்குவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இது சிக்கலான ஒன்று.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ளது.

ஆனால் தடை செய்யப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வ சுதந்திரமாக தோன்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதை உணர முடிகிறது.

தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறது பாகிஸ்தான். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சொர்க்கத்திலிருந்தா வந்தார்களா? அல்லது வேறு கிரகத்திலிருந்து வந்தார்களா?. அவர்கள் அங்கேயேதானே இருக்கிறார்கள்.

தீவிரவாதம் தொடர்பான பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சர்வதேச சமுதாயத்த ஈர்க்கும் வகையில் இந்த விவாதம் இருக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

சமீப காலத்தில் ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பெங்களூரில் நடந்த தாக்குதல்களில் ஒரு திட்டமிட்ட நோக்கம் தெரிகிறது. வெளிநாட்டினரைத்தான் குறி வைத்து தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டினரின் மரணத்திற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் விருந்தினர்கள்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா மீது தவறு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாட்டினர் புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையின் பரிமாணம் அவர்களுக்குப் புரிந்துள்ளது என்றார் பிரணாப்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive