பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து பேசிய பார்லிமென்ட் எதிர் கட்சி தலைவர் அத்வானி, நாட்டை துண்டாட நடக்கும் தீவிரவாதிகளை ஒன்றாக இணைந்து ஒழிப்போம் என தெரிவித்தார். அத்வானி கூறியதாவது : தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியாவுக்கு எதிரானது. எனவே இதை சமாளிக்க மத்திய அரசுடன் எதிர்கட்சியான பா.ஜ., வும் இணைந்து ஒத்துழைக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. இந்திய மக்களை பாதுகாக்க இந்தியா எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்தியா தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகளை இணைந்து ஒழிப்போம் : லோக்சபாவில் அத்வானி உறுதி
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, December 11, 2008

0 comments:
Post a Comment