தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் குட்டு

கொல்கத்தா: இப்போது உள்ளதை விட பல மடங்கு நெருக்கடிகள் அடுத்த நிதியாண்டில் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ்.

மேலும் அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகள் முழுமையாக அடிமட்ட மக்களைச் சென்றடைய வங்கிகள் உதவ வேண்டும். அனைத்து சலுகைகளையும் வங்கியுடனேயே நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:

இந்த நிதி ஆண்டு கடுமையாக அமைந்துவிட்டது. ஆனால் வரும் நிதியாண்டு 2009-10 இதை விட கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
இப்போதை விட கடும் சரிவை சந்திக்கவிருக்கிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி. இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்திய அரசுக்கு விரிவான அறிக்கையும் அனுப்பியுள்ளது. இப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினாலும், வரும் இழப்புகளைத் தடுக்கவே முடியாது. அந்த அளவு பாதிப்புகள் நமக்கும் வரவுள்ளன.

ஆனாலும் அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளின் குறுக்கே நிற்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.

மேலும் வட்டி விகிதங்கள் குறையுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதை எப்போது எப்படி குறைப்போம் என்பது உண்மையில் எங்களுக்கே தெரியாது!

இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவான வளர்ச்சிதான் கிட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த அளவு கூட இருக்காது. 5 சதவிகிதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க, அரசு அறிவித்துள்ள பல ஆயிரம் கோடி சிறப்புச் சலுகைகள் அடிமட்ட மக்களுக்கும் போய் சேரும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அறிவிப்புக்கு அர்த்தமிருக்காது. அவரவர் தங்கள் பாதுகாப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்?

இன்றைய தேவை ஒருங்கிணைந்த வளர்ச்சி. அதற்கு வங்கிகள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. பார்க்கலாம்... அடுத்த நிதியாண்டு என்ன நடக்கிறது என்பதை!, என்றார் சுப்பாராவ்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive