தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி கம்பம் நகரில் நடந்த 54 ஜோடி இலவசத் திருமண விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க. என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வறுத்தெடுத்துவிட்டார்.

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட விஜயகாந்த் குருபெயர்ச்சிக்குப் (டிசம்பர்_6) பின்னால் தன் தீவிர அரசியல் நடவடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதேபோல் கம்பத்தில் நடந்த இலவசத் திருமண விழாவிற்கும் ஜோதிட நம்பிக்கைதான் காரணமாம்.

அதாவது, விஜயகாந்தின் ஜாதகம் சிரம திசையில் இருக்கிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தால் தோஷத் தடைகள் நீங்கும் என்று கேரள பகவதி அம்மன் கோயில் நம்பூதிரி ஒருவர் பரிந்துரைத்தாராம். இதையடுத்துத்தான் இந்தத் திருமண ஏற்பாடுகளாம்.

இதையடுத்து விழா ஏற்பாடுகளைக் கவனிக்க தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி பார்த்தசாரதி சில வாரங்களுக்கு முன்பே கம்பத்தில் முகாமிட்டுவிட்டார். கிழக்குத் திசையில் மேடை என்பதிலிருந்து அதன் வண்ணம் வரை ஜோதிட அடிப்படையிலே அமைக்கப்பட்டதாம். விஜயகாந்தின் 54 வயதையொட்டி 54 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவாகியிருக்கிறது.

விஜயகாந்தும் அவரது மனைவியும் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு விழா மேடை ஏறினர். கேப்டன் தம்பதியர் முல்லைப்பூ மாலை சூடிக்கொண்டு ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். (அதுவும் ஜாதகத்தின் படிதானாம்) விஜயகாந்த் மேடை ஏறுவதற்கு முன்னால் அவரது கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்தார்கள். பிறகு மைக்கைப் பிடித்த விஜயகாந்த் முதல்வர், ஸ்டாலின், ஜெ. என அத்தனைபேரையும் காய்ச்சி எடுத்துவிட்டார்.

"54 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஏழைகளை உருவாக்குவது அரசாங்கம்தான். `புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள்' என்று என் பெயரைச் சொல்லாமல் என்னைச் சாடுகிறார் மு.க. ஸ்டாலின். ஏன் என் பெயரைச் சொல்ல என்ன பயம்? தைரியம் இருந்தால் என் பெயரைச் சொல்லட்டும். நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆசைப்படுகின்றனர்.

நான் மின்சாரத்தைப் பற்றிப் பேசிய பிறகுதான் ஆற்காட்டார் நடவடிக்கை எடுக்கிறார். நான் ராமேஸ்வரம் போன பின்னால்தான்கலெக்டரும், மற்ற அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். இந்த பயத்தை நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. ஆனால் இரண்டு கட்சிக்காரர்களும் கோடிகோடியாக கொள்ளையடித்துவிட்டார்கள். இப்போதிருக்கும் மந்திரிகள் கல்லூரி கட்டுகிறார்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து கல்லூரிகளைக் கட்ட முடியுமா? நான் சேலத்தில் 1200 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தேன். கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் `ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பேன்' என்றார். இப்போது எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்?

எ.வ. வேலு. அவர் ஒரு ஏமாத்துற வேலு. எந்த ரேஷன் கடையில மோசமான அரிசி இருக்கிறது என்று கேட்கிறார். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பாடு என்றார்கள். அது எந்த ஊரில் எந்த ஓட்டலில் கிடைக்கிறது என்றே தெரியவில்லை?'' என்று திருமண விழாவிலும் வறுத்தெடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார் விஜயகாந்த்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive