ஷில்லாங்: பாஜக மூத்த தலைவரும், பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி, மேகாலயா தலைநகர் ஷில்லாங்குக்கு வரும்போது அவரை கொலை செய்யப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து இமெயில் மிரட்டல் வந்துள்ளது.அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வருகிறார். அப்போது அவரை கொலை செய்யப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து ஷில்லாங் டைம்ஸ் மற்றும் மாபோர் ஆகிய இரு மேகாலயா நாளிதழ்களுக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.இந்தியன் முஜாஹிதீன் அனுப்பியுள்ள இமெயிலில், அத்வானி ஷில்லாங் செல்லும்போது அவர் கொல்லப்படுவார். அத்வானியின் இந்துத்வா கொள்கை இந்த நாட்டை பாசிச பாதைக்கு இட்டுச் ெசன்றுள்ளது என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.அலி ஹூசேன் பாதர், வட கிழக்கு பீல்டு கமாண்டர், இந்தியன் முஜாஹிதீன் என கையெழுத்திடப்பட்டுள்ளது.முதல்வர் அவசர ஆலோசனை:இந்த இ மெயில் குறித்து முதல்வர் டான்குபார் ராய், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இ மெயில் வந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.இதுகுறித்து மேகலாயா மாநில டிஜிபி பி.கே.ராய் சவாய்ன் கூறுகையில், இரு நாளிதழ்களுக்கும் வந்துள்ள மிரட்டல் இ மெயிலில், அத்வானி 29ம் தேதி ஷில்லாங் வரும்போது அவரைக் கொல்லப் போவதாக இந்தியன் முஜாஹிதீன் பெயரில் மிரட்டப்பட்டுள்ளது.இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. சீரியஸாக கருதுகிறோம்.இந்த மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அத்வானி ஷில்லாங் வரும்போது அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் அவர்.
அத்வானிக்கு இந்தியன் முஜாஹிதீன் கொலை மிரட்டல்
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, September 25, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment