பெரும் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்காவில், 12 வயதைக் கடந்த 20 பேரில் ஒருவருக்கு மன அழுத்த நோய் உள்ளதாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மன அழுத்த நோயின் தாக்கம், ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இதில், 80 சதவீதம் பேர், தங்களால் இயல்பாக செயல்படமுடிவில்லை என்று தெரிவித்துள்ளனர். 27 சதவீதத்தினர், தங்களது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், வீட்டிலோ அல்லது வெளியிலோ எந்தவிதமான பணிகளையும் திறம்பட செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஏழ்மையில் உள்ள ஏழு அமெரிக்கர்களில் மன அழுத்தம் காரணமாக, பணிசெய்யும் இடத்தில் குறைந்த அளவிலான தொழிலாளர்களே சென்றதால், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு. எட்டாயிரத்து 300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக இந்த ஆய்வை மேற்கொண்ட லாரா எப்ராட் மற்றும் தேப்ரா ப்ரோடி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.வறுமை காரணமாக, மன அழுத்தங்களுக்கு ஆளான நபர்களும் அதிகமாக உள்ளனர். ஏழ்மையில் உள்ள ஏழு அமெரிக்கர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதிலும், கறுப்பின மக்களே, வெள்ளையின மக்களைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள், தகுந்த சிகிச்சை பெற்ற பின்னர், பழைய நிலைக்குத் திரும்பினாலும், மிக அதிகமாக பாதிக்கப்படும் நபர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே, மனநல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.ஆண்களில் 39 சதவீதத்தினரும், பெண்களில் 22 சதவீதத்தினரும் கடுமையான மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தன் காரணமாக, அவர்களால் எதிலுமே திறம்பட பணியாற்ற முடியவில்லை.இதிலும் 40 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இப்பாதிப்பு அதிகம். குறைந்த வருவாய் பெறும் நபர்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐவரில் ஒருவருக்கு மன அழுத்தம்: ஆய்வில் “திடுக்” தகவல்
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, September 25, 2008
Labels: மருவத்துவ செய்திகள்

0 comments:
Post a Comment