படுக்கை அறையில் பூக்கள் இருந்தால் இனிமையான கனவுகள் வரும் என்று ஜெர்மனி ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
தூங்கும் போது உங்களுக்கு கெட்ட கெட்ட கனவாகவே வருகிறதா? கவலையை விடுங்கள்
தினமும் ஒரு சில பூக்களை படுக்கை அறையில் வையுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை.
இளைஞர்கள் தினமும் கனவில் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் டூயட் பாடலாம்.
முதியவர்கள் பழைய இனிமையான நினைவுகளை அசை போடலாம் என்று ஜெர்மனி ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த ஆய்வில் 15 பேரை ஈடுபடுத்தினர். தினமும் அவர்கள் தூங்கும்போது அவர்கள் இருந்த அறைக்குள் விதவிதமான வாசனை பரவ விடப்பட்டது.
ஒரு நாள் இரவில் அழுகிய முட்டை வாசனையும், அடுத்த நாள் ரோஜா மலர்கள் வாசனையை பரவவிட்டனர்.
மூன்றாவது நாள் எந்த வாசனையையும் பரவவிடவில்லை. மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் இரவில் கண்ட கனவுகளை பற்றி எழுதித் தரும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஒரு மாதத்துக்கு நடந்த இந்த சோதனையில் கிடைத்த தகவல்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அழுகிய முட்டை வாசனையை தூக்கத்தில் சுவாசித்தவர்களுக்கு கெட்ட கனவு வந்ததும், ரோஜா பூ வாசனையை சுவாசித்த இரவில் அவர்களுக்கு இனிமையான கனவு வந்ததும் தெரியவந்தது.
இதனால், படுக்கை அறையில் பூக்களை வைத்தால் இனிமையான கனவுகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
மணக்கும் பூக்களால் இனிய கனவு
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, September 25, 2008

0 comments:
Post a Comment