தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மும்பை சம்பவத்துக்கு பாக்., பின்னணிக்கு ஆதாரம் சிக்கியது! * உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., தொடர்பு அம்பலம்

மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான் இது என்பதும் அம்பலமாகியுள்ளது.கடந்த புதனன்று, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 183 பேர் பலியாகினர். 60 மணி நேரம் வரை சண்டையிட்டு, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரே ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையில் தினமும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.


பயிற்சி அளித்தவர்கள் யார்: இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான், இந்த பயங்கர தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.இதே போல், அமெரிக்க அரசும் மேலும் பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. அவை விரைவில் இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:


அமெரிக்க படைகளின் தலைமை தளபதி மைக் முல்லன் நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள், தங்களிடம் நிறையவே உள்ளன என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாக்., ராணுவ அதிகாரிகள், "மும்பை தாக்குதலில் ராணுவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் வேலையாக இருக்கலாம்' என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளனர்.மும்பை தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும், மற்றவகை உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.


மேலும், லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு தற்போது, ஜமாயத் -உத் -தவா என்ற பெயரில் செயல்படுகிறது. அந்த அமைப்புக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதால், அதன் தலைவரான ஹபீஸ் முகமது சயீதுவை கைது செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.


இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.


அமெரிக்கா நம்பிக்கை : இதற்கிடையில், அதிபர் புஷ்ஷின் உத்தரவின் பேரில், இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ், நேற்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடர்வது என, பாகிஸ்தான் உறுதி மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனால், மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் நிச்சயம் விசாரணை நடத்தும். அதைச் செய்யும் என அமெரிக்கா நம்புகிறது.மும்பை தாக்குதல் விவகாரத்தை கையாள்வதில் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பு குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் நான் பேசினேன். மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை ஒரு களமாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.


பயங்கரவாத விஷயத்தில், பாகிஸ்தான் தன் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்கும்.மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பாக, இந்தியாவுக்கு எந்த விதமான உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. மும்பையில் நடந்தது போன்ற தாக்குதலை, இதற்கு முன் இந்த துணைக் கண்டம் கண்டதில்லை.இவ்வாறு காண்டலிசா ரைஸ் கூறினார்.அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களுக்கு "விசா ' தரும் நடைமுறையில் புதிய விண்ணப்பம், மற்றும் அணுகுமுறைகளை மத்திய அரசு நேற்று மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இதனால், "விசா' பெறுவது இனி சுலபமாக இருக்காது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive