வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில், பிரகாஷ் காரத் ஜெயலலிதாவுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் காரத் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரா உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் பரதன் , மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க., சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகிறது.
அ.தி.மு.க,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி : பிரகாஷ்காரத் - ஜெயலலிதா சந்திப்பில் முடிவு.
Posted by
தமிழ்க்குமரன்
Friday, December 5, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment