இந்தியா தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும் என, அந் நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி திமிர்த்தனமாகப் பேசியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் எதிரொலியாக இந்திய - பாக்., எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்தியப் படைகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தான் அரசு வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.இதனால், நேற்று முன்தினம் பாகிஸ்தான் போர் விமானங்கள் அந் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வலம் வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை நேற்று முன்தினம் இரவு ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கியானி சந்தித்துப் பேசினார். அதிபர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.அப்போது, ராணுவத்தினரின் தயார் நிலை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக் கப்பட்டுள்ளன. சந்திப்புக்குப் பின் பத்திரிகை ஒன்றுக் குப் பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி கூறியதாவது:
எந்த நிலைமையையும் சந்திக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. நாட்டுக்காக தங்களைத் தியாகம் செய்ய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் பகுதியில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும்.
இவ்வாறு கயானி கூறியுள் ளார்.
இதுதொடர்பாகப் பேட்டியளித்த அதிபர் சர்தாரி கூறியதாவது:
பாகிஸ்தான் தன் அண்டை நாடுகள் அனைத்துடனும் சுமுகமான மற்றும் இணக்கமான உறவு வைத்துக் கொள் ளவே விரும்புகிறது. ஆனால், எங்களை அச்சுறுத்தும் வகையில் இந்தியத் தலைவர்கள் விடுக்கும் அறிக் கைகள், போர் சூழ்நிலையை உருவாக்குகின்றன; பிராந்திய அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டால், அதை ஒன்றுபட்டு எதிர்கொள்வது என, பாகிஸ் தான் பாதுகாப்பு நிறுவனங்களும், ராணுவமும், அரசியல் தலைவர்களும் மற்றும் பொதுமக்களும் விரும்புகின்றனர். போர் தொடுக்கப்பட்டால், எல்லையைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுக்கு உரிமையுள்ளது.இவ்வாறு அதிபர் சர்தாரி கூறினார்.
பயங்கரவாத முகாம்கள் : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முப்படைகளின் கூட்டுத் தளபதி அட்மிரல் மைக் முல்லன் நேற்று முன் தினம் திடீரென பாகிஸ்தான் வந்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், அவர் பாக்., வருவது இது இரண்டாவது முறை. இஸ்லாமாபாத் வந்த அவர், பாக்., ராணுவ அதிகாரிகளைச் சந்தித் துப் பேசினார்.அப்போது, பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அந்தக் கோரிக்கையை பாக்., அரசு நிறைவேற்ற வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட் டுள்ள பதட்டத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக் கும் விஷயத் தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
மும்பை துயர சம்பவம் நடந்துள்ள இந்த நேரத்தில், பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழித்துக் கட்ட இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் முல்லன் வலியுறுத்தினார்.இதற்கிடையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வாஷிங்டனில் பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச் சக தகவல் தொடர்பாளர் சீன் மெக்கர் மாக், ""மும்பைத் தாக்குதலுக்குக் காரண மானவர்களைக் கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, ஒவ்வொரு நாளும் பாகிஸ் தானை வலியுறுத்தி வருகிறோம். யாரைப் பிடிக்க வேண்டும். யார் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதை எல்லாம் பாகிஸ்தான் அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
பாகிஸ்தானுடன் போரா? மன்மோகன் சிங் மறுப்பு: ""பாகிஸ்தானுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்த வேண் டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மற்றும் ஐ-கமிஷனர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் நிலைத் தன்மையை பேணிக்காக்க வேண்டும் என, இந்திய அரசு விரும்புகிறது. ஆனால், நிலைமை யோ கவலை அளிப்பதாக உள்ளது. ஒரு பொரு ளாதார சக்தியாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குறிக்கோளை சீர்குலைக்கும் வகையில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைப்பதை நாம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. யாரும் போரை விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட வேண்டும். இதைச் செய்யும்படி பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பிரச்னை போர் அல்ல. பயங்கரவாதமே பிரச்னை. பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பாகிஸ்தான் மண் பயன்படுத்தப்படுகிறது.
அந்துலே விவகாரம் முடிந்து போன விவகாரம். அந்தப் பிரச்னை இனியும் இழுக்காமல் முடிவடைய அனுமதிக்க வேண்டும். போலீஸ் அதிகாரி கர்காரே மரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் அரசின் நிலையை சிதம்பரம் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். அதில், அமைச்சர் அந்துலே திருப்தி அடைந்து விட்டார். எனவே, அந்துலே எழுப்பிய சர்ச்சை முடிந்து விட்டது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியாவுக்கு தலிபான்கள் மிரட்டல்: இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ் தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக் கான தற்கொலைப் படையினருடன் களம் இறங்குவோம் என்று அறிவித் துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கமான தேரிக் - இ- தலிபான் அமைப்பின் தலைவன் பைதுல்லா மெக்சூத் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் மீது போர் திணிக்கப் பட்டால், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்களும் இறங்குவர். இதற்காக நன்கு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்.அத்துடன் நூற்றுக்கணக்கான தற் கொலைப் படையினரும், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயாராக உள்ளனர்.பாகிஸ்தான் எல்லையைக் காக்க போராடும்
பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இவர்கள் துணையாக இருப்பர். உண்மையான புனிதப் போர் நடத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இதற்காகத்தான் தலிபான்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அணு ஆயுத பலம் படைத்த ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை பலவீனப் படுத்த, கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த எதிரிகளின் திட்டங்களை எல்லாம் நாங்கள் முறியடிப்போம். பாகிஸ்தான் படைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக போரிட்டு வரும் தலிபான்கள், எப்படி அவர் களுக்கு துணையாக நிற்பர் என, மக்கள் கேள்வி எழுப்பலாம். அதனால், நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.எங்களுக்கு எதிராக பாக்., ராணுவத்தினர் செயல்பட்டது எல்லாம் முடிந்து போன விஷயம். ஆனால், இப்போது, நாட்டைக் காப்பாற்றவும், அது நிலைத்து நிற்கவும் பாக்., ராணுவம் போரிட உள்ளது. அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிகழ்ந்தால், ஆப்கானிஸ்தான் உடனான பாக்., எல்லையையும் நாங்கள் பாதுகாப்போம். பாகிஸ்தான் மேற்குப் பகுதி எல்லையைப் பற்றி, அந்நாட்டு அரசும், மக்களும், அரசியல் தலைவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை.அந்த எல்லையைக் காக்கும் பணியில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான எங்களின் போராளிகள் ஈடுபட்டுள்ளனர். பாக்., ராணுவத்தின் தலைமையில், அவர்களின் உத்தரவை ஏற்று செயல் பட தலிபான்கள் தயாராக உள்ளனர்.இருந்தாலும், எங்களுக்கென தனி பகுதியை ஒதுக்கி சண்டையிட அனுமதிக்க வேண்டும்.
இந்தியா தாக்கினால் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ தளபதி திமிர் பேச்சு
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, December 23, 2008

0 comments:
Post a Comment