தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

இரவு 10 மணிக்கு மேல், 'சரக்கு!' நோ!' : விற்பனை நேரத்தை குறைத்தது அரசு

டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்படுகிறது. மேலும், "புதிய கடைகள் இனி திறக்கப்படாது' என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசின், "டாஸ்மாக்' நிறுவனம், 2003ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதிமுதல் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 41 மதுபானக் கிடங்குகள் மற்றும் 6,700 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.இதன்மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்து வந்துள்ளது. தனது வருவாயில் இருந்து ஆயத்தீர்வை, அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் திருப்பித் தர வேண்டிய விற்பனைக் கட்டணம், இறக்குமதி அனுமதி உரிமக் கட்டணம், விற்பனை வரி, சிறப்பு உரிமைக் கட்டணம் ஆகிய வகைகளில் அரசுக்கு, "டாஸ்மாக்' நிறுவனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தி வருகிறது.


இந்நிலையில், "டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டுமென பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்தபோது, ராமதாசின் கோரிக்கையை ஏற்று, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் நேரத்தை முதல்வர் கருணாநிதி குறைத்தார்.இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருந்தன. இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.


இதுதொடர்பாக அரசு கூறியிருப்பதாவது:


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் தெரிவித்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 1,300 பார்கள் மூடப்பட்டுள்ளன. 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக முழு மதுவிலக்கை அடையும் வகையில், முதல் கட்டமாக, இனி புதிய மதுக்கடைகளை தமிழகத்தில் திறப்பதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.


தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்பதை, ஒரு மணி நேரம் குறைத்து, வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படுமென முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஜனவரி 9, திருமங்கலம் இடைத்தேர்தல், ஐந்து மாதங்களில் லோக்சபா பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive