தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

லக்வியை குறி வைத்து விட்டது அமெரிக்கா : மும்பை பகீர்

மும்பையில் நடந்த பாகிஸ் தான் பயங்கரவாதிகளின் அதிபயங்கர தாக்குதல் பின்னணியில் முழுமையாக பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., உள்ளது என்பதை 100 சதவீதத்துக்கு மேல் நிரூபித்ததால் தான் பாகிஸ்தான் பணிந்துள்ளது.ஈராக் மற்றும் இந்தியாவில் பயங்கரவாத சதி திட்டங்களை நிறைவேற்றி வரும் லஷ்கர்- இ-தொய்பாவின் பின்னணியில் பாக்., ராணுவ முன்னாள் கமாண்டர் சகி உர் ரகுமான் லக்வி இருப்பதை இந்தியா, ஆதாரங்களுடன் கூறியுள்ள நிலையில், அமெரிக்கா விழித்துக் கொண்டுள்ளது.


கண்டிப்பான அறிக்கை : லக்வி தான், லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி மற்றும் அமைப்புக்கு உலக அளவில் நிதி வசூலித்து தரும் முக்கிய வேலைகளை செய்து வருவதாக ஏற்கனவே, கடந்த மே மாதம் அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், லஷ்கர் -இ -தொய்பா உட்பட சில பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றங்களை தடை செய்யவும், லக்வி மற்றும் லஷ்கர் -இ -தொய்பா நிறுவனர் முகமது சயீது ஆகிய இருவரின் நிதி நடவடிக்கைகளை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தானுக்கும் கண்டிப்பான அறிக்கை அனுப்பிய அமெரிக்கா, லஷ்கர் -இ தொய்பா- உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதையோ, அடைக்கலம் தருவதையோ தடுத்து நிறுத்திட கடும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியது.


"புரூடா' விட்டார் முஷாரப்: கடந்த 2002ம் ஆண்டு, அப்போது அதிபராக இருந்த முஷாரப், பாகிஸ்தானில் லஷ்கர் -இ -தொய்பா உட்பட எல்லா அமைப்பும் தடை செய்யப் பட்டுள்ளது; அதன் தலைவர்கள் முடக்கப்பட்டுள்ளனர்' என்றார். மேலும், அதற்கு முன், 2001 செப்டம்பர் தாக்குதலுக்கு பின், அமெரிக்க ராணுவம் எடுத்த ராணுவ நடவடிக்கையில் பாகிஸ் தான் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிந்து விட்டதாகவும், அதில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் "புரூடா' விட்டார் முஷாரப். ஆனால், உண்மையில் அவர்கள் சாகவில்லை. அவர்கள் தான் ஈராக், இந்தியாவில் பல சதி திட்டங்களை தீட்டி நிறைவேற்றியுள்ளனர் என்பது இப்போது மீண்டும் இந்தியாவில் நடந்த தாக்குதல் மூலம் உறுதியாகி உள்ளது.இதனால் தான் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தானை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.


எச்சரிக்கை விடுத்துள்ளார் ரைஸ் : இந்தியாவில் பேச்சை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் அமைதியாகவே பேசினார். கண்டிப்புடன் அவர் நடந்துகொள்ளவில்லை என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ரைஸ், கடுமையாக பேசியுள்ளார். பிரதமர் கிலானியுடன் பேசும் போது, எதிர்காலத்தில் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.லக்வி தொடர்பாக பல தகவல் களை அளித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஈராக், இந்தியாவில் நடந்த அத்தனை சதி சம்பவங்களுக்கும் லக்வி தான், பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார்.


அமெரிக்கா நம்பத் தயாரில்லை: மும்பையில் நாரிமன் கட்டடத்தில் இருந்த ஒரு பயங்கரவாதி சரண் அடைய தயாரானபோது, சேட்டிலைட் போன் மூலம் அவனுடன் பேசி, "இந்த போர் நம் தனிப்பட்ட போரல்ல; நம் மக்களின் போர்' என்று அவன் மூளையை சலவை செய்து சரண் அடையாமல் தடுத்தார் என்ற விவரமும் இப்போது தெரியவந்துள்ளது.
கடந்த பத்தாண்டாக நடந்த பல தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், லக்வி முக்கிய பங்கு கொண்டுள்ளதை இந்தியாவும் உறுதி செய்துள்ளது. இவருக்கு பாக்., ராணுவமும், ஐ.எஸ்.ஐ.,யும் உடந்தையாக இருந்துள்ளதையும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்கும் இந்த முறை கடும் எரிச்சல் வந்துள்ளது.


லஷ்கர் பயங்கரவாத தலைவர் களை கைது செய்து அமெரிக்காவுக்கு "நல்ல பிள்ளை' போல பாகிஸ்தான் நடந்து கொண்டாலும், இந்த முறை அமெரிக்கா நம்பத் தயாரில்லை. அதனால், அடுத்து அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive