இந்தியாவிலுள்ள 50 கோடி மக்கள், மொபைல் போனுக்கு மாதம் செலவிடும் பணத்தைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலம் தயாரிக்க முடியும்,'' என விஞ்ஞானி அண்ணாதுரை பேசினார்.கோவை பாரதியார் பல்கலையில், "சந்திரயான் -1' திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:நிலவில் உள்ள தட்ப வெப்பநிலை மாற்றம், விண்கலங்களை பாதிக்கவே செய்யும். தற்போது சந்திரயான் - 1 விண்கலம், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை பயன்படுத்தி நிலவில் ஆய்வு நடத்தப்படுகிறது. "சந்திரயான் - 2' விண்கலம், நிலவில் உள்ள நீர் வளம், கனிம வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தும்.நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளதால், இந்தியாவிலேயே, செயற்கைகோளை தயாரித்து, விண்வெளியில் செலுத்தி தரும்படி, பல நாடுகள் கோரி வருகின்றன. இனி, வணிக ரீதியாகவும் அதிக நன்மைகளை விண்வெளி ஆய்வு மையம் பெறும்.இந்தியாவில், 30 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.
அடுத்த இரு ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை 50 கோடியாக உயரும். இவர்கள், மொபைல் போனுக்கு மாதம் சராசரியாக 200 ரூபாய் செலவழிப்பர். இந்த மக்கள், ஒரு மாதத்துக்கு மொபைல் போனுக்கு செலவழிக்கும் தொகையைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலங்களை உருவாக்க முடியும்.விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் மீத்தேன் வாயு, மிகக்குறைந்த அளவே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை முழுமையாக பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.
மொபைல் போனுக்கு செலவிடும் பணத்தால் 10 சந்திரயான் தயாரிக்கலாம் * விஞ்ஞானி அண்ணாதுரை பேச்சு
Posted by
தமிழ்க்குமரன்
Friday, December 5, 2008

0 comments:
Post a Comment