தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

2025ல் இந்தியா எப்படி? : அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்

எதிர்காலத்தில், இந்தியாவும், சீனாவும் உலகின் மிகப்பெரும் சக்தியாக வளர்ச்சி பெறும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா பதவியேற்க சில நாட்களே இருக்கும் நிலையில், "உலகளாவிய சூழ்நிலைகள்-2025' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பல்வேறு கோணத்தில் இந்தியாவையும் சீனாவையும் அலசுகிறது.


அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரகத்தின் அறிக் கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் நன்றாக உள்ளன. ஆனால், இந்த வளர்ச்சியை எளிதில் அடைந்துவிட முடியாது. பொ ருளாதார, சமூக தடங்கல்களைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கும். தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், 2025ம் ஆண்டில், உலகிலேயே சீனா தான் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்; ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருக் கும். வரும் 2025ம் ஆண்டில், அமெரிக்காவே தொடர்ந்து தனிமுக்கியத்துவ நாடாக நீடிக்கும். இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் அதிகரிக்கும். ஆனால், சுதந்திரத்துக்குப் பின் தற் போது இந்தியாவில் அதிகரித் துள்ள பிராந்திய, இனவாத தீவிரவாதம் நீடித்தால், வளர்ச்சியில் தடை ஏற்படும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படாது. பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத இயக் கத்தையும் இந்தியா கட்டுப்படுத்திவிடும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் வன்முறைகள் மற்றும் ஸ்திரமின்மையை இந்தியா சந்திக்க நேரிடும். குறிப்பாக மாவோயிச பயங்கரவாதம் அதிகரித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரியளவில் வன்முறைகள் ஏற்படும்.


இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சிறப்பாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்ப மாற்றம், வர்த்தகம் போன்றவை அதிகரித்துள்ளன. இந்த உறவுகளை வேறு சில நட்பு நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதை, இந்தியாவின் அரசியல் தலைமை தவிர்க்கும். அமெரிக்காவை ராணுவ ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ இந்தியா பார்க்கவில்லை. ஆனால், சர்வதேச சூழ்நிலை அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சீனா - அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் கலாசாரப் பாலமாக விளங்கும் வகையில் இந்தியா திகழும். பல்வேறு நாடுகளுடன் நட்புறவு இந்தியாவுக்கு அதிகரிக்குமே தவிர, அது எந்த நாட்டுடனும் ஓட்டுநாடாக இருக்காது. ஜனநாயகம் தழைத்திருக்கும். அரசியல் கூட்டணிகள் வெற்றிகரமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் 150 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை அன்று இருக்கும். எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இருப்பினும், எரிசக்தி, மின் சார தேவை, உணவு, நீர்வளம் பற் றாக்குறை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப, இவற்றின் சப்ளையை உருவாக்க வேண்டியிருக்கும்.


மேற்கத்திய நாடுகளில் இருந்து கிழக்கத்திய நாடுகளுக்கு வளமும், பொருளாதார சக்தியும் மாறும் வகையில், உலகமய பொருளாதாரம், மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கீழை நாடுகளுக்கு பொருளாதாரம் இடம் பெயர்வது இனி அதிகரிக்கும். இரண்டாவது உலகப் போருக் குப் பின், ஏற்படுத்தப்பட்டு பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறைகள் அனைத்திலும், புரட்சி ஏற்படுத்தப்படும். சர்வதேச அளவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிய நாடுகள் முக்கியத்துவம் பெறும். அத்துடன், இந்நாடுகள் சர்வதேச அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கும். அதே சமயம் இந்தோனேஷியா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள் வளரும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive