எதிர்காலத்தில், இந்தியாவும், சீனாவும் உலகின் மிகப்பெரும் சக்தியாக வளர்ச்சி பெறும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா பதவியேற்க சில நாட்களே இருக்கும் நிலையில், "உலகளாவிய சூழ்நிலைகள்-2025' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பல்வேறு கோணத்தில் இந்தியாவையும் சீனாவையும் அலசுகிறது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரகத்தின் அறிக் கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் நன்றாக உள்ளன. ஆனால், இந்த வளர்ச்சியை எளிதில் அடைந்துவிட முடியாது. பொ ருளாதார, சமூக தடங்கல்களைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கும். தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், 2025ம் ஆண்டில், உலகிலேயே சீனா தான் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்; ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருக் கும். வரும் 2025ம் ஆண்டில், அமெரிக்காவே தொடர்ந்து தனிமுக்கியத்துவ நாடாக நீடிக்கும். இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் அதிகரிக்கும். ஆனால், சுதந்திரத்துக்குப் பின் தற் போது இந்தியாவில் அதிகரித் துள்ள பிராந்திய, இனவாத தீவிரவாதம் நீடித்தால், வளர்ச்சியில் தடை ஏற்படும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படாது. பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத இயக் கத்தையும் இந்தியா கட்டுப்படுத்திவிடும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் வன்முறைகள் மற்றும் ஸ்திரமின்மையை இந்தியா சந்திக்க நேரிடும். குறிப்பாக மாவோயிச பயங்கரவாதம் அதிகரித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரியளவில் வன்முறைகள் ஏற்படும்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சிறப்பாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்ப மாற்றம், வர்த்தகம் போன்றவை அதிகரித்துள்ளன. இந்த உறவுகளை வேறு சில நட்பு நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதை, இந்தியாவின் அரசியல் தலைமை தவிர்க்கும். அமெரிக்காவை ராணுவ ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ இந்தியா பார்க்கவில்லை. ஆனால், சர்வதேச சூழ்நிலை அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சீனா - அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் கலாசாரப் பாலமாக விளங்கும் வகையில் இந்தியா திகழும். பல்வேறு நாடுகளுடன் நட்புறவு இந்தியாவுக்கு அதிகரிக்குமே தவிர, அது எந்த நாட்டுடனும் ஓட்டுநாடாக இருக்காது. ஜனநாயகம் தழைத்திருக்கும். அரசியல் கூட்டணிகள் வெற்றிகரமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் 150 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை அன்று இருக்கும். எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இருப்பினும், எரிசக்தி, மின் சார தேவை, உணவு, நீர்வளம் பற் றாக்குறை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப, இவற்றின் சப்ளையை உருவாக்க வேண்டியிருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் இருந்து கிழக்கத்திய நாடுகளுக்கு வளமும், பொருளாதார சக்தியும் மாறும் வகையில், உலகமய பொருளாதாரம், மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கீழை நாடுகளுக்கு பொருளாதாரம் இடம் பெயர்வது இனி அதிகரிக்கும். இரண்டாவது உலகப் போருக் குப் பின், ஏற்படுத்தப்பட்டு பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறைகள் அனைத்திலும், புரட்சி ஏற்படுத்தப்படும். சர்வதேச அளவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிய நாடுகள் முக்கியத்துவம் பெறும். அத்துடன், இந்நாடுகள் சர்வதேச அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கும். அதே சமயம் இந்தோனேஷியா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள் வளரும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.
2025ல் இந்தியா எப்படி? : அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்
Posted by
தமிழ்க்குமரன்
Friday, November 21, 2008
Labels: உலக செய்திகள்

0 comments:
Post a Comment