ராமநாதபுரம் அருகே பள்ளவச்சேரி கிராமத்தினர், விவசாயக் கூலி வேலைக்கு செல்ல முடியாததால், எலிகளை வேட்டையாடி சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், உழவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விதைநெல் அழுகி, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோர் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.அதேபோல், உப்பள பணியாளர்களும் மழையினால் சோர்வடைந்துள்ளனர்.
வயல்களில் திரியும் எலிகளை : இவர்களில் பலர், அன்றாட சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே, பள்ளவச்சேரி கிராமத்தில், 500 பேர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலைக்கு செல்பவர்கள். மழையால் வேலை இழந்துள்ள இவர்கள், வயல்களில் திரியும் எலிகளை வேட்டையாடி சாப்பிடத் துவங்கியுள்ளனர்.
பகிர்ந்து உண்டேன்' : கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) கூறுகையில், "வேலை இல்லாமல் முடங்கிக் கிடப்பதால், அரிசி வாங்கக்கூட காசு இல்லை. எனவே, வயலில் எலிகளை பிடித்து சமைத்து சாப்பிடுகிறோம்' என்றார்.பள்ளி மாணவன் முருகன் கூறுகையில், "மழை நேரம் என்பதால் வயல்வெளிகளில் அதிகமான எலிகள் நடமாடுகின்றன.
ஒரு நாள் வேட்டையாடியதில் 17 எலிகள் எனக்கு கிடைத்தன; அதை, எனது நண்பர்களோடு பகிர்ந்து உண்டேன்' என்றார்.
எலி கறி சாப்பிடும் விவசாய கூலிகள் : வேலை கிடைக்காததால் பரிதாபம்
Posted by
தமிழ்க்குமரன்
Saturday, October 18, 2008

0 comments:
Post a Comment