தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

நிலவில் முத்திரை பதிக்கிறது மூவர்ணக்கொடி

சந்திராயன்-1 செயற்கைக்கோளில் உள்ள "மூன் இம்பாக்ட் புரோப்' கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் நிலவில் மோதி இறங்கவுள்ளது. இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட இக்கருவி, நிலவை அடைந்த ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத்தரவுள்ளது.ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட் மூலம் சந்திராயன்-1 செயற்கைக்கோள், வரும் 22ம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஏவப்பட்ட 20வது நிமிடத்தில், சந்திராயன்-1 செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையை அடையும். அங்கிருந்து படிப்படியாக, மூன்று லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவின் சுற்றுப்பாதையை அடையவுள்ளது.


3டி புகைப்படம் எடுத்தல் : நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, சந்திராயன்-1 செயற்கைக்கோள் நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் நிலவை இரண்டு ஆண்டுகள் சுற்றிவந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக சந்திராயன்-1 செயற்கைக்கோளில் மொத்தம் 11 கருவிகள் உள்ளன.இக்கருவிகள் நிலவில் தாதுக்கள், வாயுக்கள், தண்ணீர், பனிக்கட்டி இருப்பது குறித்த ஆய்வு மற்றும் நிலவை 3டி புகைப்படம் எடுத்தல் பணிகளில் ஈடுபடுகின்றன. சந்திராயன்-1 செயற்கைக்கோளில், இந்தியாவுக்குச் சொந்தமான ஐந்து கருவிகள் உள்ளன.இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட மூன் இம்பாக்ட் புரோப் (எம்.ஐ.பி.,) கருவி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் (9ம் தேதி என எதிர்பார்க்கப்படுகிறது)


அமெரிக்கா, ரஷ்யா : சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பிரிக்கப்படுகிறது. எம்.ஐ.பி., கருவியில் உள்ள ராக்கெட்டால் இக்கருவியை நிலவை நோக்கி செலுத்தப்பட்டு, நிலவில் மோதி இறங்கவுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் நிலவில் மனிதன் பாதுகாப்பாக இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை, "இஸ்ரோ' சோதனை செய்யவுள்ளது. இதன்மூலம் இந்திய மூவர்ணக்கொடி, நிலவில் இடம்பெறவுள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பான ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா ஆகிய ஐந்து நாடுகள், இதற்கு முன் நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா ஆறாவது நாடாக இணையவுள்ளது.


சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்களைப் பெற பெங்களூரிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பைலாலு கிராமத்தில், "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையம் 100 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. சந்திராயன்-1 செயற்கைக்கோளிலிருந்து பெறப்படும் தகவல்கள் பல்வேறு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.சந்திராயன்-1 செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-சி11 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. ராக்கெட் கட்டுமான மையத்திலிருந்து, செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட ராக்கெட் நேற்று இரண்டாவது ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive