சர்ச்சை கிளம்பியதால், நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க காரைக்குடி அழகப்பா பல்கலை மறுத்துவிட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலையில், டிச., 24ம் தேதி, 21வது பட்டமளிப்பு விழா, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குமாறு மகாராஷ்டிர ரசிகர் மன்றத்தலைவர் ஆதிமூலம், பதிவாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தார்.
ரஜினிக்கு பட்டம் நிராகரிப்பு: பதிவாளர் இ.இளமதியன் கேட்டுக் கொண்டதால், ரஜினியின் பயோடேட்டாவை, பல்கலைக்கு அனுப்பினார் ஆதிமூலம். இது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்க, பல்கலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ரஜினி குறித்து திடீர் சர்ச்சை எழுந்ததால், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் திட்டத்தை, பல்கலை நிராகரித்து விட்டது. புதிய நடிகர் ஒருவர் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பல்கலை இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பல்கலை பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், "21வது பட்டமளிப்பு விழாவில் யாருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்போவதில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது நிருபரிடம் அவர் கூறுகையில், "நடிகர் ரஜினிக்கு கவுரவ பட்டம் வழங்கக் கோரி மனுவுக்கு மதிப்பளித்து பயோடேட்டா கேட்டோம். சிண்டிகேட் ஒப்புதலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே இது சர்ச்சைக்குரிய விஷயம் என்பதால், அத்திட்டத்தை நிராகரித்து விட்டோம். மற்றபடி புதிய நடிகர் தரப்பில் யாரும் எங்களிடம் பேசவில்லை' என்றார்.
ரஜினிக்கு கவுரவ டாக்டர் பட்டம் நிராகரிப்பு
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, October 30, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment