தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

ஜெயலலிதாவுக்கு விடுதலைப்புலிகள் மிரட்டல்!: தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை

"பெனசிர் புட்டோ கதி ஜெயலலிதாவுக்கு ஏற்படும்' என, விடுதலைப்புலிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மற்றும் போலீசிடம் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.


தனக்கு முழுமையான, "இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெய்சந்திரன், "எஸ்.பி.,க்குக் குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்து பெற வேண்டும். பின், அறிக்கையை பாதுகாப்பு ஆய்வுக் குழுவிடம் அளிக்க வேண்டும். சட்டப்படி இக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தார்.


நேற்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெய்சந்திரன் சேம்பருக்கு அ.தி.மு.க., வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், எல்.பி.சண்முகசுந்தரம், வெங்கடேஷ், கந்தசாமி உள்ளிட்டோர் சென்று, ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக தெரிவித்தனர். கடிதத்தின் நகல்களை டி.ஜி.பி., உள்துறைச் செயலருக்கு அனுப்ப வக்கீல்களிடம் நீதிபதி ஜெய்சந்திரன் கூறினார். சிறப்பு அரசு பிளீடருக்கும் நகலை வழங்கும்படி கூறினார். இதுகுறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக வக்கீல்களிடம் நீதிபதி தெரிவித்துள்ளார்.


வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், சண்முகசுந்தரம் கூறும்போது, "உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ஐகோர்ட் உத்தரவுப்படி இன்னும் பாதுகாப்புக் குழு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றனர். ஐகோர்ட் உத்தரவுப்படி உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.


அவர்களிடம் அளித்த மனுவில், "எங்கள் கட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்துக்குச் செல்ல இருக்கும் நிலையில், இதுபோன்ற கடிதம் வந்துள்ளது. இதை அனுப்பியவர் யார், பின்னணியில் யார் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து உரியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.


"இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் போராடும் விடுதலைப்புலிகள் பிரச்னையில் தலையிட வேண்டாம்' என இறுதி எச்சரிக்கை விடுப்பதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. "உலகத் தமிழ் இனப் பாதுகாப்புக் கழகம், பேங்காக் கிளை, தாய்லாந்து; தலைமையகம் - ராபர்ட் ஸ்டிரீட், குயிஸ் ஹவுஸ், கனடா' என்ற முகவரி அந்தக் கடிதத்தில் உள்ளது. வெ.தமிழ்மைந்தன், ஆசிய திட்ட அலுவலர் என கையெழுத்திடப்பட்டுள்ளது.


மொத்தம் நான்கு பக்கம் உள்ள அந்தக் கடிதத்தில், "புலிகளைப் பற்றி பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். தேவையில்லாமல் தலையிட்டால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும். பாகிஸ்தானில் பெனசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதி ஏற்படும். புலிகளை யார் அழிக்க நினைத்தாலும், எதிராக செயல்பட்டாலும் அவர்களை அழிக்கத் தயங்க மாட்டோம்' எனக் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive