தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பசும்பொன்னில் ஜெயலலிதா கார் மீது கல் வீச்சு: போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

பசும்பொன்னில் நேற்று நடந்த திடீர் கலவரத்தில், ஜெயலலிதா கார் மீது கல் வீசப்பட்டது. ஜெயலலிதா காயமின்றி தப்பினார். போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் 101வது ஜெயந்தி விழாவும், 46வது குரு பூஜை விழா நடந்தது. தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா, சென்னையிலிருந்து விமானத்தில் நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு இறங்கினார். அங்கிருந்து காரில் தேவர் நினைவிடம் வந்தார். ஐந்து கார்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாநில பாதுகாப்பு போலீசாரும் வந்தனர்.


ஜெயலலிதா கார், பசும்பொன் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் நுழையும் வாயிலை நெருங்கியதும், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாதுகாப்பு படை போலீசார் கார்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. கற்கள் வீசிய கும்பல் மீது தடியடி நடத்த, ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார். போலீசார் விரட்டியும் அங்கிருந்து அகலாமல், அதே கும்பல் தொடர்ந்து கற்கள், செருப்புகளை வீசின.


போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை மூன்று முறை வீசினர். இதன் பின், கல் வீசிய கும்பல் சிதறி ஓடியது. கல் வீச்சு தாக்குதலில், பரமக்குடி போக்குவரத்து போலீஸ் முருகேசன், ராமநாதபுரம் ஆயுதப்படை எஸ்.ஐ., அருளானந்தம், திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் ராஜேந்திரன் மற்றும் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமி காயமடைந்தனர். இவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவசர விபத்து மருத்துவச் சிகிச்சை வாகனத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.


போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர். பசும்பொன் தேவர் நினைவிட நுழைவாயில் வரை எங்கு பார்த்தாலும், செருப்புகளும், கற்களும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில், ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, அதே பகுதியில் அ.தி.மு.க., ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தையும் துவக்கி வைத்தார். பின்னர், மதுரை வழியாக சென்னை புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத்துக்கு பின், தேவர் சமாதி நுழைவாயில் மற்றும் பிரதான நுழைவாயில் கதவுகள், 30 நிமிடம் மூடப்பட்டன. அமைதி திரும்பிய பின், மீண்டும் அஞ்சலி செலுத்துவதற்காக திறந்து விடப்பட்டன.


மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் ஜெயலலிதா பேட்டி: "மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது: பசும்பொன்னில் நடந்த தாக்குதல், தி.மு.க.,வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதைவிட, சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்று கூறவேண்டும். இந்த தாக்குதல் அற்பத்தனமானது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி மற்றும் தேசவிரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.


எனக்கு நேற்றுதான் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறையினர், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் எனக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு போலீசார் வழிவகை செய்து கொடுத்துள்ளனர். இன்று பசும்பொன் கிராமத்தில் கூடியிருப்பவர்கள் அனைவரும் என்னுடைய மக்கள். என்னை பார்ப்பதற்காக வந்தவர்கள்.


இந்த கூட்டத்தை பார்த்து சகித்து கொள்ள முடியாத சிலர், திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில், இன்று நடந்த தாக்குதல் சம்பவத்தையும் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக நான் மிரட்டல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.50 மணிக்கு சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் அளித்த பேட்டி:


பசும்பொன் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே என் ஆதரவாளர்கள். என்மீது அக்கறை கொண்டவர்கள். என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அங்கு உற்சாகமாக கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த நான்கு விஷமிகள் கற்களை வீசி வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இதில் என் கார் கண்ணாடி உடைந்தது. எனக்கும் காயம் ஏற்பட்டது.


என் காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கான்வாயில் இருந்த கார்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் நடக்கும் போது போலீசாரும் இருந்தனர். வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்கள், கைகளை கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். பெருகிவரும் எனது ஆதரவை, இந்த சம்பவத்தால் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.


புறப்பாடு தாமதம்: விமான படிக்கட்டுக்களில் ஏறும் போது கால் தவறியதால் ஜெயலலிதாவின் மதுரை புறப்பாடு தாமதமானது. மாற்று ஏற்பாட்டிற்கு பின், அவர் நேற்று மதியம் தனி விமானம் மூலம் மதுரை சென்றார். ஜெயலலிதா நேற்று காலை 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். மதுரை செல்வதற்காக "இன்டர்நேஷனல் ஏர்கிராப்ட் பாம்பே' என்ற தனியார் நிறுவனத்தின் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.


அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், விமானத்தில் ஏறுவதற்காக ஜெயலலிதா வந்தார். அவர் உள்ளே ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுக்கள் பொருத்தப்பட்டிருந்தன. படிகளின் அகலம் மிகவும் சிறியதாக இருந்ததால் அதில் ஜெயலலிதா ஏற முயன்ற போது கால் தவறியது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏறாமல், கார் மூலம் 11.10 மணிக்கு வீடு திரும்பினார். இதற்கிடையில் அகலமான படிக்கட்டுக்கள் விமானத்தில் பொறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு ஜெயலலிதா மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தார். பின், 1.55 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். மாலையில் அதே விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive