"பா.ம.க., பிரமுகர் குருவை சிறையில் சந்திக்கக் கோரி மனு அளித்தால் சிறை விதிகளின்படி அனுமதிக்க வேண்டும்' என, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பா.ம.க., தலைவர் மணி தாக்கல் செய்த மனு:எங்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வன்னியர் சங்கத் தலைவருமான குருவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, திருச்சி சிறையில் உள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில்,தேசிய பாதுகாப்புச் சட் டத்தின் கீழ் காவலில் வைப்பவர்களை நேரில் சந்திப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி பார்த்தால், காவலில் வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமே அவர்களைச் சந்திக்க முடியும். இவ்வாறு உறவினர்களுக்கு மட்டுமே சிறையில் இருப்பவர்களை சந்திப்பதற்கு அனுமதி அளிப்பது நியாயமானதாக இல்லை.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குருவை காவலில் வைத்த பிறகு, அவரை சந்திக்க நண்பர்கள், பா.ம.க.,வைச் சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கு அனுமதி அளிக்க சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் தான் காவல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே, திருச்சி மத்திய சிறையில் இருக்கும் குருவை சந்திக்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள்,எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்க வேண் டும்.உறவினர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி குலசேகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராம சாமி ஆஜராகி, "சிறை விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்.
மனுதாரர் தரப்பில் விண்ணப்பம் அளித்தால், அதை சட்டப்படி பரிசீலிப்போம்' என்றார். இதையடுத்து நீதிபதி குலசேககரன் பிறப்பித்த உத்தரவில்,"மனுவில் குறிப்பிடப்பட் டுள்ள நபர்கள் விண்ணப்பம் அளிக்கும்பட்சத்தில், சிறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப் படையில் குருவை சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம்' எனக் கூறியுள்ளார். அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.
பா.ம.க., குருவை சந்திக்க அனுமதி விதிப்படி பரிசீலிக்க கோர்ட் உத்தரவ
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, August 6, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment