தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியேற்கும் ஒபாமா ; மார்டின் லூதர் கிங்கின் கனவு நிஜமானது

அமெரிக்காவின் முதல் ஆப்ரோ-அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்கிறார். நிறப்பாகுபாட்டை எதிர்த்து போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவு இதன் மூலம் நிஜமாகியுள்ளது. இன்று வாஷிங்டனில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்கிறார். 47 வயதாகும் ஒபாமா அமெரிக்காவின் இளம் அதிபர்களில் ஒருவர்.அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹோனலூலுவில் 1961 ஆக. 4ம் தேதி பராக் ஒபாமா பிறந்தார். இவரது தந்தை சீனியர் ஒபாமா கென்யாவை சேர்ந்தவர். தாய் அமெரிக்காவை சேர்ந்த ஆன் டன்ஹம். இவருக்கு இரண்டு வயதாகும் போதே இவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 10 வயதுவரை இந்தோனேஷியாவில் வசித்தார். பின்னர் ஹோனலூலுக்கு திரும்பி தனது தாத்தா வீட்டில் தங்கி பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். பள்ளியில் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக திகழ்ந்தார்.


பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம்: லாஸ் ஏஞ்சலிசின் ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்தார். 1982ம் ஆண்டு ஒபாமாவின் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது தந்தையை ஒபாமா ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1983ம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்சில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்கில் "பிசினஸ் இன்டர்நேஷனல்கார்ப்ரேஷன்', "நியுயார்க் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் ரிசர்ச் குரூப்' ஆகிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்றினார். 1988ல் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த பின் வழக்கறிஞராக இருந்த போது 1992ல் மிஷல் ஒபாமாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தார். 1993ல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில் பணியாற்றினார்.


1995ல் அமெரிக்காவில் நிலவும் இன வேறுபாடுகள் குறித்து "டிரீம்ஸ் பிரம் மை பாதர்' என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் மூலமாக கிடைத்த பணத்தில் சிகாகோவில் வீடு வாங்கியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார். 1996ம் ஆண்டு இல்லினாய்ஸ் செனட் உறுப்பினராக தேர்வானார். 2005ல் அமெரிக்க செனட்டின் உறுப் பினரானார்.


365 இடங்களை கைப்பற்றினார்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வு பெற இவருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி பெரும் பான்மை பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று, அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஏறத்தாழ ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் தேர்தல் நிதி திரட்டினார். ஈராக் போர் தொடர்பான புஷ்சின் கொள்கைகளை தனது பிரசாரத்தில் ஒபாமா கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார். கடந்த நவ. 4ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மெக்கைனை எளிதாக வீழ்த்தி மொத்தமுள்ள 538 இடங்களில் 365 இடங்களை கைப்பற்றினார். 52 சதவீத வாக்குகளை பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மெக்கைனுக்கு 45 சதவீத வாக்குகளே கிடைத்தன.


தாயார் வெள்ளையினத்தவர். : ஒபாமாவின் பிரமாண்ட வெற்றிக்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீரழிவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஒபாமாவின் தந்தை கருப்பினத்தை சேர்ந்தவர். இவரது தாயார் வெள்ளையினத்தவர். எனினும் தனது தாயாரின் முன்னோர்கள் அமெரிக்க பழங்குடி மக்களாக இருக்கலாம் என ஒபாமா தெரிவித்துள்ளார். இவரது தந்தை இஸ்லாமியராக இருந்தாலும், தாயின் கிறிஸ்தவ மதத்தை ஒபாமா பின்பற்றினார். எனினும் இளைஞராக இருந்த போது சில ஆண்டுகள் நாத்திக கொள்கைகளில் நாட்டம் கொண்டார்.


ஆணுஆயுத தயாரிப்பை கைவிடும் படி சிரியா மற்றும் ஈரான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒபாமா வலியுறுத்தி வருகிறார். உலகம் முழுவதும் அணுஆயுத உற்பத்தியை நிறுத்த ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஆயுதங் களை உருவாக்க பல்லாயிரம் கோடி டாலர் செலவிடப்படுவதாகவும், தான் அதிபரானவுடன் அதை குறைப்பேன் என்றும் உறுதியளித் துள்ளார். எண்ணெய் இறக்குமதியை குறைத்து, வேறுவகைகளில் ஆற்றல் உற்பத்தியை பெருக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஒபாமாவுக்கு மலியா, ஷாஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive