பா.ம.க., பிரமுகர் குரு மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத் தின் படி ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித் துள்ளார்.முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட "கேள்வி-பதில்' அறிக்கை:வன்னியர் சங்கத் தலைவர் குரு எந்த வகையில் நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவித்துள்ளார். எந்த வழியில் ஊறு விளைவித்தார்? என இரண்டு மூன்று நாட்களாக ராமதாஸ் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குரு பேசிய பேச்சின் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கே மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறேன். "எம்.எல்.ஏ., சிவசங்கரின் அப்பாவாலேயே ஒன்றும் முடியவில்லை. சிவசங்கர் நேற்று வந்த சின்னப் பையன்.மத்திய அமைச்சர் ராஜா கருணாநிதியின் எடுபிடி. இவனுக்கு எடுபிடி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர். எங்கள் கட்சிப் பொறுப்பாளர் மீது வழக்குப் போட்டால் மத்திய அமைச்சர் ராஜாவோ, சிவசங்கரோ, நீங்க யாரும் உயிரோடு இருக்க முடியாது.
உங்கள் குடும்பத்தையே உயிரோடு எரித்துவிடுவோம். பெரம்பலூர் கலெக்டர் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். போலீஸ் எங்கள் மீது எந்த வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். ஒரு போலீஸ்காரன் கூட பொண்டாட்டிகிட்ட படுக்க முடியாது. ஊரில் ஒரு பஸ் கூட ஓடாது; எரித்து விடுவோம்."டேய் சிவசங்கர் நீ சின்னப் பையன். உன் அப்பனைக் கேளுடா, நீ மட்டும் வைத்தியைக் கைது செய்திருந்தால் ஆண்டிமடம் தொகுதியில் இந்நேரம் இடைத் தேர்தல் வந்திருக்கும்.இனி தி.மு.க.,காரன் எந் தப் பொதுக் கூட்டத்தில் தாக் கிப் பேசினாலும் அத்தனை பேரையும் வெட்டிக் கொளுத்துங்கடா.'வன்முறை என்றால் என்னவென்றே தெரியாத கட்சியைத் சேர்ந்தவர் பேசிய பேச்சுத் தான் இது. இதற்காகத் தான் வழக்கு.
பா.ம.க.,விற்கும் தி.மு.க.,விற்கும் சமரசம் ஏற்படுத்த நடந்த முயற்சி என்னவாயிற்று?
இவ்வளவு பேசியவரைக் கண்டித்து பா.ம.க., பொதுக் குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை. எவ்வளவு தான் பொறுமையாக இருக்க முடியும்? ஒரு வார இதழில் என் பேத்தி கயல்விழி அளித்த ஒரு பேட்டி இடம் பெற்றுள்ளது. அதில் பா.ம.க.,வைப் பற்றியும், அதன் தலைவைரைப் பற்றியும் அந்தக் கட்சி அனாதையாக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் வந்திருப்பதைப் படித்தவுடன், தொலைபேசி மூலம் என் பேத்தியை அழைத்து நான் திட்டியதில் அவர் அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது.
குரு மீது புகார் கொடுத்தவர்களே அதை இல்லை என்றும் அப்படி புகார் செய்யவில்லை என்றும் சொல்வதாக பா.ம.க., தலைவர் சொல்கிறாரே?
புகார் கொடுத்தவர், ஒரு நீதிபதியின் முன் அந்தப் புகாரை பதிவு செய்திருக்கிறார் என்று போலீஸ் கூறுகிறது.தற்போது அந்தப் புகாரை மறைத்துவிட்டு, மிரட்டலுக்கு அஞ்சி தான் புகாரே கூறவில்லை என்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் அரசு கேபிள் "டிவி' தொடங்கிய போது நீங்கள் அதை ஆதரிக்கவில்லையே?
மாநில அரசு கேபிள் "டிவி' நிறுவனம் தொடங்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவித்து, "டிவி' நடத்த முடிவெடுத்ததால் ஆதரிக்க முடியவில்லை.ஜெயலலிதா தொடங்குவதாக இருந்தது, அனைத்து "டிவி' கம்பி வடங்களும் அரசுக்கே சொந்தம்; மற்ற நிறுவனங்கள் அந்தத் தொழிலில் ஈடுபட முடியாது.இப்போதைய அரசு கேபிள் "டிவி' நிறுவன திட்டத்தில் மற்ற அனைத்து தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து கேபிள் இணைப்பு சேவைகளை வழங்கலாம். தற்போதைய அரசு நிறுவனம் பொதுவில் இயங்கக் கூடியது; அரசுக்கே ஏகபோகம் அல்ல. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் பேத்தியின் பேட்டியும் உங்களுக்காக
குருமீதுதே.பா., சட்டம்ஏன்? கருணாநிதி விளக்கம்
Posted by
தமிழ்க்குமரன்
Saturday, July 12, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment