மும்பையில் தாக்குதல் நடத் திய பயங்கரவாதிகள் பாகிஸ் தானை சேர்ந்தவர்கள் தான் என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை' என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பையில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவல் பரப்பப்படுகிறது. இதுவரை அதை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் தரப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். மும்பை தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும், அதை அவனது தந்தையே ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த சம்பவத்தையும் நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ஜமாயத்-உத்-தாவா அமைப் பின் தலைவர் ஹபீஸ் சயீது, தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள் ளார். இவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத் தால், சட்டப்படி கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக் கப்படும். பயங்கரவாதம் தொடர் பான பிரச்னையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு சர்தாரி கூறினார்.
இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மவுலானா மசூத் அசார் கைது குறித்து பாகிஸ்தான் நேற்று திடீர் பல்டி அடித்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச் சர்கள், மசூத் அசார் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். பாகிஸ்தான் மீடியாக்களும் மசூத் அசார் கைது செய்யப்பட்டது குறித்து செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இதுகுறித்து முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மவுலான மசூத் அசார் கைது செய்யப்படவில்லை. அவர் பாகிஸ்தான் போலீசாரல் தேடப்பட்டு வருகிறார். பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்' என்றார். இதையடுத்து, மசூத் அசார் கைது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய தூதருக்கு அழைப்பு: இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி மன்பிரித் போராவுக்கு, பாகிஸ்தான் அரசு சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு சென்ற போராவிடம், இம்மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறிப் பறந்தது தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்டது.
ராணுவ நடவடிக்கை இல்லை: பாகிஸ்தானில் உள்ள அவாமி தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் கட்சி தலைவர் அஸ்பந்தயர் வாலி கான், இந்திய தூதரக அதிகாரி சத்யபிரதா பாலை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடாது என்றும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்படவில்லை என்றும், இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுவதும் தவறான தகவல் என்றும் அவர் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை: மீண்டும் கொக்கரிக்கிறார் சர்தாரி
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, December 18, 2008

0 comments:
Post a Comment