தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

பயங்கரவாதிகளின் தாக்குதலில், அப்பாவி மக்களின் மரணங்களை சகிப்பது தான் பெரும் தவறு. வி.ஐ.பி.,க்களின் உயிர் மட்டுமல்ல, சாதாரண மக்களின் உயிரும் விலை மதிப்பானது தான். இதை கவனத்தில் கொண்டு, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கலாம்!'- இப்படி விளாசி இருப்பவர் வேறு யாருமல்ல, காங்கிரஸ் கட்சியின் இளம் பொதுச்செயலர் ராகுல். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருப்பது தொடர்பாக மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார்; அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு போலீசையும் "அரசியலாக்கி' விளையாடும் வி.ஐ.பி.,க்களை சூடான வார்த்தைகளால் கண்டித்தார்.


பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடித்து மக்களை காப்பது தொடர்பாக அவர் பேசியதாவது:


ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது தான். ஒவ் வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் போது, அதை சகித்து பழகி வருகிறோம். நாம் செய்யும் பெரிய தவறு இது தான்.
அப்பாவி மக்களில் ஒருவரின் உயிர் பறித்தாலே நாங்கள் சகிக்க மாட்டோம் என்பதை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிர் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லாதது தான். அப்படி பார்க்கும் போது, வி.ஐ.பி.,க்கள் மட்டும் மிக அதிக பாதுகாப்புடன், கருப்புப்பூனைகளுடன் வலம் வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை நாம் உணர வேண்டும்.


வி.ஐ.பி.,க்கள் தலையீடு கூடாது: மும்பையில் நடந்த பயங்கரம், இதுவரை இல்லாத அளவுக்கு நடந்துள்ள கொடூரம். பல நாளாக நடந்துவரும் பயங்கரவாத வன்முறையின் தொடர்ச்சிதான் இது.இந்திய மக்களுக்கு , ஜனநாயகத்தில் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளும் கிடைத்துள்ளது. பேச்சு சுதந்திரம் உட்பட எல்லா உரிமைகளையும் அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள உரிமை உண்டு. இதையும் மும்பை சம்பவத்துக்கு பின் நிரூபித்துவிட்டனர். அதில் தவறே இல்லை.மக்களின் பாதுகாப்புக்கு தான் போலீஸ் , பாதுகாப்புப்படையினர் அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது. அவர்களின் பணி மாற்றம், பதவி உயர்வு உட்பட எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் வி.ஐ.பி.,க்கள் தலையீடு இருக் கக்கூடாது. இதை காங்கிரஸ் எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்கள் பின்பற்றுவர் என்று நம்புகிறேன்.மும்பையில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஓம்பாலே என்பவர், பயங்கரவாதியை எதிர்த்து உயிர்நீத்தார்.


அவரிடம் துப்பாக்கி இல்லாததால், அவரால் அவனை திருப்பி சுடமுடியவில்லை; அவரை காத்துக் கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் உள்ள ஒரு உயிரை கூட கொல்ல, நாம் அனுமதிக்க மாட்டோம் என்ற அறைகூவலை நாம் பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியராகிய நம் எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கின்றனர் பயங்கரவாதிகள். "நாம் எல்லாரும் ஒருவர் தான்' என்பதை நம் ஒற்றுமையின் மூலம் காட்டினால்,பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்கிவிடலாம்.இவ்வாறு ராகுல் பேசினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive