தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

குகையில் அடைத்து பிரசவம் பார்த்த காதலன்

செஞ்சி அருகே காதலி கர்ப்பமானதை மறைக்க, குழந்தை பிறக்கும் வரை மலைக்குகையில் தங்க வைத்து, காதலனும், அவனது தாயும் சேர்ந்து பிரசவம் பார்த்த கொடுமை அரங்கேறியுள்ளது. பிறந்த பெண் குழந்தையின் நிலை குறித்து தெரியாமல், அப்பாவிப் பெண் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நெகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(70). சென்னையில் வசிக்கும் இவரது மகள்களுடன், ஜானகிராமன் கூலி வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகள் சுமதி(28), மகன் விநாயகமூர்த்தி(24) ஆகியோர், நெகனூர் புதூரில் வசித்து வருகின்றனர்.



செஞ்சியில் கடை ஒன்றில் விநாயகமூர்த்தி வேலை செய்ததால், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார்.சுமதிக்கும், பக்கத்து வீட்டு பெருமாள் மகன் வெங்கடேசன்(33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சுமதி கர்ப்பமானார். கர்ப்பத்தைக் கலைக்க, வெங்கடேசன் மாத்திரை வாங்கித் தந்தார். கர்ப்பத்தைக் கலைத்து விட்டால், வெங்கடேசன் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விடுவார் எனக் கருதிய சுமதி, மாத்திரைகளை சாப்பிடவில்லை. நாட்கள் அதிகமானதால், சுமதியின் வயிறு பெரிதானது. திருமணம் செய்து கொள்ளும்படி வெங்கடேசனை வற்புறுத்தினார். "கர்ப்பமாக இருக்கும் போது, திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள். குழந்தை பிறந்து விட்டால், அதை காண்பித்து எனது பெற்றோரை சம்மதிக்க வைக்கலாம்' என வெங்கடேசன் சமாதானம் செய்தார். அது வரையில், தனியாக குடித்தனம் வைக்க திட்டமிட்ட வெங்கடேசன், சுமதியை அழைத்துச் சென்றார். வெங்கடேசனுக்கு சொந்தமான நிலத்தின் அருகில் இருந்த மலைக் குகையில் பகலிலும், வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய மாட்டுக் கொட்டகையில் இரவிலும் தங்க வைத்தார்.கொட்டகையில் இருந்து, பொழுது விடிவதற்குள் சுமதி மலைக் குகைக்கு சென்று விடவேண்டும். இருட்டிய பிறகே, மலையில் இருந்து வெளியே வர வேண்டும். "மீறி வெளியே வந்தால், நான் மருந்து குடித்து இறந்து விடுவேன்' என வெங்கடேசன் மிரட்டினார். இந்த நாட்களில் சுமதி சாப்பிடுவதற்கு வெங்கடேசன் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரும், ஒரு பாட்டிலில் ராகி கூழும், சில நாட்களில், குறைந்த அளவில் சாப்பாடும் கொடுத்துள்ளார்.சுமதிக்கும், வெங்கடேசனுக்கும் இருந்த தொடர்பு ஊரில் பலருக்கும் தெரிந்திருந்ததால், சுமதி காணாமல் போன போது, வெங்கடேசனுடன் எங்காவது தனிக்குடித்தனம் இருக்கலாம் எனக் கருதி, சுமதியின் குடும்பத்தினர் தேடாமல் விட்டு விட்டனர். கடந்த 25ம் தேதி பகல் 1 மணியளவில் மலைக் குகையில் தனியாக இருந்த சுமதிக்கு, பிரசவ வலி ஏற்பட்டு சூரியன் மறையும் முன் மாட்டுக் கொட்டகைக்கு வந்தார். சுமதி சத்தம் போட்டால் வெளியே தெரிந்து விடும் என பயந்த வெங்கடேசன், மாட்டுக் கொட்டகைக்கு சற்று தொலைவில் இருந்த பொட்டல் காட்டில் மண் தரையில் சுமதியை படுக்க வைத்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.இரவானதும் வந்த வெங்கடேசன், சுமதியின் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, பிரசவம் பார்க்க முயன்றார். குழந்தை பிறக்காமல் சுமதியின் அலறல் அதிகமானதால் பயந்து போன வெங்கடேசன், தனது தாய் எல்லம்மாளை அழைத்து வந்துள்ளார்.வெங்கடேசனை திட்டிய எல்லம்மாள், சுமதியின் வயிற்றில் முரட்டுத்தனமாக அழுத்தி குழந்தை பிறக்க வைத்துள்ளார். சுமதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் கழுத்தில் காலை வைத்து எல்லம்மாள் கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த சுமதி, "என்னையும், குழந்தையையும் உயிரோடு விட்டு விடுங்கள். இதற்காகத்தான் இத்தனை நாள் மலைக் குகையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தேன்' என கெஞ்சியுள்ளார்.





"குழந்தையை குளிப்பாட்டி எடுத்து வருகிறோம்' என்று வெங்கடேசனும், எல்லம்மாளும் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.மறுநாள் 26ம் தேதி காலை 7 மணிக்கு வெங்கடேசன் மட்டும் வந்து டீ கொடுத்துள்ளார். குழந்தை பற்றி சுமதி கேட்டதற்கு, "என்னிடம் தான் இருக்கிறது' என்று வெங்கடேசன் கூறியுள்ளார். அங்கு வந்த எல்லம்மாள், வெங்கடேசனை திட்டி விட்டு, "இனி இவளை பார்க்காதே' என தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.பிரசவம் நடந்த இடத்தில் அதிக ரத்தப்போக்குடன் கிடந்த சுமதியை எறும்புகள் கடித்து துன்புறுத்தின. வலி தாளாமல் துடித்த சுமதி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று அவ்வழியாகச் சென்ற சிறுமியிடம் தனது நிலையைக் கூறி, குடும்பத்தினரை அழைத்து வருமாறு கூறினார்.சிறுமி சொன்ன தகவலையடுத்து, மலையடிவாரத்திற்கு சென்று சுமதி உறவினர்கள், அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செஞ்சி மருத்துவமனை டாக்டர்கள், புதுச்சேரி செல்லுமாறு அனுப்பி விட்டனர். பின்னர், செஞ்சியில் தனியார் டாக்டரிடம் காண்பித்தனர். செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சுமதியின் சித்தி ராஜம் வீட்டில் சுமதியை தங்க வைத்தனர்.சுமதியின் குழந்தையை வெங்கடேசனும், அவனது தாய் எல்லம்மாளும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வந்ததால், சுமதியின் தந்தை ஜானகிராமன், இரண்டு நாள் முன் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.கொலை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், வளத்தி போலீசில் புகார் தருமாறு மகளிர் காவல் நிலையத்தில் திருப்பி அனுப்பினர்.செஞ்சி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சீனுவாசன், மா.கம்யூ., நகர செயலர் நெடுஞ்சேரலாதன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ஜோதிபாசு ஆகியோர், சுமதியை நேற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.சுமதியின் நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், புதுச்சேரி அல்லது விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, சுமதியை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று சுமதியின் தந்தை ஜானகிராமன், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு ரசீது கொடுத்துள்ள போலீசார் விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive