கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என, ஆளுங்கட்சி மிரட்டியதை அடுத்து, முஷாரப் நேற்று பதவி விலகினார். 1999ல் அதிகாரத்தை கைப்பற்றிய முஷாரப், ஒன்பது ஆண்டுகள் ஆட்சியை தன்வசம் வைத்திருந்தார்.
அக்., 12, 1999: ராணுவ தளபதியாக இருந்த முஷாரப்பை பதவி நீக்கம் செய்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப். பதில் நடவடிக்கையாக, நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றினார் முஷாரப்.
மே 13, 2000: நவாஸ் ஆட்சி கவிழ்ப்புக்கு பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.
டிச., 2000: விமான கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாசுக்கு விடுதலை. சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தல். 10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு திரும்ப தடை.
ஜூன் 20, 2001: பாகிஸ்தான் அதிபர் முகமது ரபீக் தரார் ராஜினாமா. முஷாரப் அதிபரானார்.
செப்., 11, 2001: உலக வர்த்தக மைய கட்டடங்கள் தகர்ப்புக்கு பின்னர், தலிபானுக்கு அளித்த ஆதரவை முஷாரப் விலக்கினார். அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம்.
ஏப்., 30, 2002: ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நடந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய முறையில் முஷாரப் வெற்றி.
அக்., 10, 2002: முஷாரப் ஆதரவு முஸ்லிம் லீக் பொதுத் தேர்தலில் வெற்றி.
நவ., 16, 2002: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 2003: இரண்டு முறை படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் முஷாரப்.
ஜன., 1, 2004: 2007 வரை பதவியில் தொடரும் வகையில் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
பிப்., 2004: ஈரான், வட கொரியா, லிபியாவுக்கு அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்களை வழங்கிய அப்துல் காதீர் கானுக்கு முஷாரப் மன்னிப்பு.
டிச., 30, 2004: ராணுவ தளபதி பதவியை உதற முஷாரப் மறுப்பு.
மார்ச் 9, 2007: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரியை நீக்கினார் முஷாரப். வக்கீல்கள் போராட்டம் வெடித்தது.
ஜூலை 10, 2007: இஸ்லாமாபாத்தின் சிவப்பு மசூதிக்குள் நுழைந்து தலிபான் ஆதரவு பயங்கரவாதிகளை தாக்கும்படி, ராணுவத்துக்கு முஷாரப் உத்தரவு. 105 பேர் பலி.
ஜூலை 20, 2007: நீதிபதி இப்திகர் சவுத்ரியை மீண்டும் நியமனம் செய்தது சுப்ரீம் கோர்ட். முஷாரப்புக்கு பின்னடைவு.
ஜூலை 27, 2007: அபுதாபியில் பெனசிர், முஷாரப் சந்திப்பு. பதவி விலகும்படி முஷாரப்பிடம் பெனசிர் வலியுறுத்தல்.
செப்., 10, 2007: சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் கைது. மீண்டும் சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அக்., 6, 2007: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு இடையே பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில் முஷாரப் வெற்றி.
அக்., 18, 2007: பெனசிர் நாடு திரும்பினார்.
அக்., 19, 2007: தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பெனசிரை படுகொலை செய்ய முயற்சி.
நவ., 2, 2007: முஷாரப் மீண்டும் தேர்தலில் நிற்க முடியுமா என்பது குறித்து விவாதிக்க சுப்ரீம் கோர்ட் கூடியது.
நவ., 3, 2007: பாகிஸ்தானில் எமர்ஜென்சி அமல். தலைமை நீதிபதி இப்திகர் நீக்கம்.
நவ., 25, 2007: நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
நவ., 28, 2007: அஷ்பக் கியானியிடம் ராணுவ தலைவர் பதவியை ஒப்படைத்தார் முஷாரப்.
நவ., 29, 2007: முஷாரப் மீண்டும் அதிபராக பதவியேற்பு.
டிச., 15, 2007: எமர்ஜென்சி விலக்கிக்கொள்ளப்பட்டது.
டிச., 27, 2007: பெனசிர் படுகொலை செய்யப்பட்டார்.
பிப்., 18, 2008: முஷாரப் ஆதரவு கட்சிகள் தேர்தலில் தோல்வி.
மார்ச் 24, 2008: யூசுப் ரசா கிலானி பிரதமராக தேர்வு.
ஆக., 17, 2008: முஷாரப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர ஆளுங்கட்சி முடிவு.
ஆக., 18, 2008: அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா.
முஷாரப் எழுச்சியும்... வீழ்ச்சியும்!
Posted by
தமிழ்க்குமரன்
Monday, August 18, 2008

0 comments:
Post a Comment