தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அதிபர் பதவியை விட்டு விலகினார் முஷாரப்

பதவி நீக்கக் கோரும் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத அதிபர் முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அரசுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தார். ஆனால், அவர் இனி சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில், அந்த அரசின் கவுரவ விருந்தினராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில், 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்து, அதன்பின் அதிபரானவர் முஷாரப். அங்கு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது. இந்தக் கூட்டணி அரசில் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஐந்து மாதமாக பதவி வகித்து வரும் இந்த அரசு, "ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கு அவர் உடன்படாததால், கண்டன தீர்மானம் மூலம் அவரை பதவியிறக்க முடிவு செய்யப்பட்டது. முஷாரப்பிற்கு எதிராக 100 பக்கங்கள் கொண்ட கண்டன தீர்மானத்தை இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யவும் ஆளும் கூட்டணி கட்சிகள் தயாராகின.
அதே நேரத்தில், "முஷாரப் விரைவில் பதவி விலக வேண்டும். அப்படி விலகினால், அவர் மீது எந்த வழக்கும் தொடரப்படாது. பதவி விலக மறுத்தால், அவரை ராணுவம் காப்பாற்றாது' என, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கியானி அறிவித்தார். இதற்கிடையில், முஷாரப் பதவி விலகிய பிறகு அல்லது வெளியேற்றப்பட்ட பின், பெண் ஒருவர் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என, பாக்., மக்கள் கட்சி தலைவர் சர்தாரி அறிவித்தார். இந்த சூழ்நிலையில், கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாத முஷாரப், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இதை தெரிவித்தார். அவர், மேலும் கூறியதாவது: ஆளும் கூட்டணியுடன் மோதலை தவிர்க்கவும், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாவதை தடுக்கவும் நான் பதவி விலகுகிறேன். எந்த கண்டன தீர்மானமும் அல்லது எந்தக் குற்றப்பத்திரிகையும் எனக்கு எதிராக நிற்க முடியாது. எனக்காக நான் எதையும் செய்யவில்லை; எல்லாவற்றையும் நாட்டிற்காகவும், மக்களுக்காகவுமே செய்தேன். எனவே, நான் மிகுந்த நம்பிக்கையில் இருந்தேன். எந்தக் குற்றச்சாட்டைக் கண்டும் நான் அஞ்சவில்லை. இருந்தாலும், கண்டன தீர்மானத்திற்குப் பின், நாடு எந்த சூழ்நிலைக்குச் செல்லும் என்பது தான் தற்போதைய கேள்வி. அப்படிப்பட்ட ஒரு நிலையற்ற, மோதலான சூழ்நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அதிபர் அலுவலகம் நெருக்கடியில் பணியாற்றுவதை நான் விரும்பவில்லை.
நான் வெற்றிப் பெறுகிறேனா அல்லது தோல்வி அடைகிறேனா என்பது முக்கியமில்லை. கண்டன தீர்மானம் பார்லிமென்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், என்ன நிலைமையாகும் என யோசித்தேன். அதிபர் அலுவலகத்தின் கவுரவம் பாதிக்கப்படும்; நாட்டின் கவுரவமும் பாதிக்கப்படும் என உணர்ந்தேன்.
தனி நபரின் தைரியத்தை வெளிக்காட்ட இது சரியான தருணம் அல்ல; இது மிகவும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம். அதனால், நாட்டின் நலன் கருதியே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ராஜினாமா கடிதம் விரைவில் பார்லிமென்டை சென்றடையும்.
என் வாழ்நாளில் 44 ஆண்டுகளை ஒரு ராணுவ வீரராக நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன். அப்படிப்பட்ட நான், பார்லிமென்டில் குதிரைப் பேரம் நடைபெறாமல் தடுக்கவே பதவி விலகியுள்ளேன். சுயநலமாக செயல்பட நினைத்திருந்தால், நான் மாறுபட்ட முடிவை எடுத்திருக்க முடியும்; அதை விரும்பவில்லை. எனக்கு எதுவும் தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை நான் மக்களின் கைகளில் ஒப்படைக்கிறேன். நானும் மனிதன் தான்; சில தவறுகள் செய்திருக்கலாம். அது மக்களால் மன்னிக்கப்படும் என நம்புகிறேன். எனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் நலன் கருதியே அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். இவ்வாறு அதிபர் முஷாரப் கூறினார்.
முஷாரப்பின் இந்த ராஜினாமாவால், அவருக்கும் ஆளும் கூட்டணிக்கும் இடையே நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், முஷாரப் தொடர்ந்து பாகிஸ்தானிலேயே இருப்பது பற்றிக் கூறப்படவில்லை என்றாலும், தலைநகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள அவரது பண்ணை மாளிகையில் வாழ்வது சுலபம் அல்ல. பொதுவாக இம்மாதிரி பதவியில் இருந்து தூக்கி எறியப்படும் போது, துருக்கி அல்லது சவுதியில் தங்குவது பாகிஸ்தானில் வழக்கம். முஷாரப் தற்போது சவுதி தலைநகர் ஜெட்டாவில் தங்கி, அரசு விருந்தினராக வாழ வாய்ப்புகள் உள்ளன. பலவீனமான கூட்டணி என்பதால், அவர் அங்கிருந்து அரசியல் நடத்தவும் விரும்பலாம். முஷாரப் ராஜினாமாவை அடுத்து, பாகிஸ்தான் செனட் சபை தலைவர் முகமது மியான் சூம்ரோ, தற்காலிக அதிபராக பதவியேற்கிறார். முஷாரப் பதவியில் இருந்து ஓட்டம் பிடித்தது குறித்து இந்திய அரசு கருத்து ஏதும் கூறவில்லை; அது பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்: "பதவி விலகப் போவதாக அதிபர் முஷாரப் அறிவித்தது, ஜனநாயக சக்திகளுக்குக் கிடைத்த வெற்றி' என, பாகிஸ்தான் ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. முஷாரப்பின் விலகலை, பாக்., மக்கள் கட்சி தொண்டர்களும், நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடி வருகின்றனர். "ஜனநாயகத்தின் குறுக்கே இருந்த மிகப்பெரிய தடை அகற்றப்பட்டு விட்டது' என, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் புட்டோ கூறினார்.
பாக்., வெளியுறவு அமைச்சர் குரேசி கூறுகையில், "முஷாரப்பை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றுவதா அல்லது வேண்டாமா என்பதை ஆளும் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வர். நாட்டின் அரசியல் சூழ்நிலை உட்பட பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் முடிவு எடுப்பர்' என்றார்.
பாகிஸ்தான் ஆளும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் வீடுகளின் முன், ஏராளமான கட்சித் தொண்டர்கள் கூடி நேற்று முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர்.
காஷ்மீரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹூரியத் அமைப்பின் தலைவர் ஜிலானியும், முஷாரப் பதவியை ராஜினாமா செய்ததில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தைச் சிக்கலாக்கியது மட்டுமின்றி, இஸ்லாமிய உலகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தியவர் முஷாரப் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive