தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வெண்கல விஜேந்தருக்கு வாழ்த்து!


ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் விஜேந்தர் குமாருக்கு பரிசு, வாழ்த்து குவிகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் 22 வயதான விஜேந்தர், கியூபாவின் எமிலியோ கோரியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆனாலும் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரிசுகளும் குவிகின்றன.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தனது பாராட்டு செய்தியில்,""விஜேந்தர் தோல்வியடைந்தாலும் அவரது திறமையான ஆட்டம் பாராட்டுக்குரியது. டில்லியில் அவரை நேரில் சந்திக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்,'' என்றார்.
இளைஞர் எழுச்சி: சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது வாழ்த்து செய்தியில்,""விஜேந்தர் மற்றும் சுஷில் குமாரின் அபார திறமை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் விளையாட்டு திறமைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்,'' என்றார்.
உலகமே பார்க்கிறது: விஜேந்தர் வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், ""ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தடைகளை உடைத்து இந்திய குத்துச்சண்டை முன்னேற்றம் கண்டுள்ளது. முதன் முறையாக பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியதை ஒரு சாதனையாக கருதுகிறேன். எங்களால் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துள் ளோம். குத்துச்சண்டை உலகம் தற்போது இந்தியாவை கவனிக்க துவங்கியுள்ளது,'' என்றார்.
இலவச விமானப்பயணம்: ஒலிம்பிக் பதக்கம் வென்றதை அடுத்து விஜேந்தருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமான சேவை வழங்க, தனியார் ஜெட் சர்வீஸ் ஒன்று முன்வந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பிந்த்ரா, சுஷில் குமார் ஆகியோரை தொடர்ந்து விஜேந்தருக்கு இலவச விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
டி.எஸ்.பி., பதவி: ஒலிம்பிக்கில் இம்முறை சாதித்த அரியானா வீரர்களான விஜேந்தர் குமார், ஜிதேந்தர் குமார், அகில் குமார், யோகேஷ்வர் தத் ஆகிய நால்வருக்கும் டி.எஸ்.பி., பதவி வழங்கப் படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் அகில் குமார், ஜிதேந்தர் குமார் காலிறுதி வரை முன்னேறினர். அரையிறுதியில் தோல்வி அடைந்த விஜேந்தர் குமார் வெண்கலம் வென்று ஆறுதல் தேடினார். இதே போல மல்யுத்த போட்டியின் காலிறுதிக்கு யோகேஷ்வர் தத் தகுதி பெற்றார். இவர் களை கவுரவிக்கும் வகையில் டி.எஸ்.பி., பதவி வழங்குவதாக முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். தவிர விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
அடுத்து தங்கம்: பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை யில் வெண்கலம் வென்ற விஜேந்தர் 2012, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று காட்டுவதாக சவால் விடுத் துள்ளார். இவர் கூறுகையில், ""அரையிறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. என்னால் வெற்றி பெற முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். இம்முடிவில் மிக உறுதியாக இருக்கிறேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive