தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கம்பிக்குள் உல்லாச உலகம் குமுதத்தின் பகீர் ரிப்போர்ட்

சென்னை புழல் சிறையில் நடந்த குளறுபடிகளும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பத்திரிகைகளில் செய்திகளாய் வந்தன. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சரி, புழல் சிறையில் மட்டும்தான் இந்த ஊழல்களா? தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய சிறைகளின் நிலை என்ன? அங்கு கைதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விசாரித்தோம். சிறை அதிகாரிகள், கைதிகளாய் உள்ளே இருந்தவர்கள், பணியாளர்கள் என பல தரப்பினரிடம் பேசினோம். நமக்கு கிடைத்த பதில்...
அதிர்ச்சி!
பீடி முதல் பிரியாணி வரை செல்ஃபோன் முதல் செக்ஸ் வரை எல்லாமே கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.
சென்ற வாரம் சேலம் மத்திய சிறையில் கைதியை பார்க்க மனு போட வந்திருப்பதைப் போல் உட்கார்ந்திருந்தோம்.
மூன்று இளைஞர்களை கொத்தாக பிடித்து இழுத்து வந்தனர் சிறைக் காவலர்கள். அவர்கள் செய்த குற்றம் மிக்சருக்குள் செல்ஃபோனை வைத்து உள்ளே இருக்கும் தங்கள் கைதி நண்பனுக்கு கொடுக்க முயன்றது. நாம் விசாரித்தபோது ``ஜெயில்ல இதெல்லாம் சகஜமப்பா'' என்றனர் அலட்சியமாக.
சிறையில் இப்போது அதிகம் தேவைப்படுவது செல்ஃபோனும் சிம்கார்டும்தானாம். எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் கைதிகள் தயாராய் இருக்கிறார்களாம்.
இந்தச் சிறையின் உள்ளே இருக்கும் ஒரு தாதா தலைவர் எப்பவும் செல்ஃபோனும் கையுமாகத்தான் உள்ளே இருக்கிறாராம். பணம் கொடுத்தால் சிறை ஊழியர்களே செல்ஃபோனுக்கு சார்ஜும் போட்டுக் கொடுத்துவிடுவார்களாம். உள்ளே உட்கார்ந்துகொண்டு ஜாலியாக காதலியுடன் பேசலாம். சதித் திட்டங்களைத் தீட்டலாம்.
சேலம் சிறை மட்டுமல்ல மற்ற சிறைகளிலும் இதே நிலைதான்.
செல்ஃபோனுக்கு அடுத்த படியாக திருச்சி சிறையில் அதிகம் கடத்தப்படும் பொருள் கஞ்சா. உள்ளே ஏக விநியோகம் நடக்கிறது என்கிறார்கள்.இங்கு ஒவ்வொரு ப்ளாக்கிலும் பீடி, சிகரெட், ஷாம்பூ, சோப்பு, டீ வரை வாங்கிக் கொள்ள, சிறைச் சாலைக்குள் திறக்கப்படாத கடைகள் இருப்பதுபோல, கஞ்சா சப்ளை செய்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்களாம். சரியான ஆளைப் பிடித்து சரியான பணத்தைக் கொடுத்தால் எதுவும் கிடைக்குமாம்.
தினமும் காலையில் உள்ளே வரும் `காய்கறி வண்டியில்'தான் சட்டத்திற்கு புறம்பான அனைத்தும் வருகிறது. பணம் கண்களை மறைப்பதால் யாருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள் உள்ளே சென்று வந்த பழைய குற்றவாளிகள்.
ஜெயிலில் நடக்கும் இன்னொரு மோசடி, கைதிகளுக்கு கொடுக்கும் உணவு.
``நூறு கிலோ காய்கறி போட்டு சமைக்க வேண்டிய இடத்துல முப்பது கிலோ போடுறது. சமையலுக்கு 50 லிட்டர் எண்ணெயைப் பயன்படுத்தணும்னா 10 லிட்டர் எண்ணெயிலயே எல்லாத்தையும் முடிச்சிடுவாங்க. ஆனா கணக்குல மொத்தமா இருக்கும்.
ஒரு கைதிக்கு அரசாங்கம் நாளொன்றுக்கு நூறு கிராம் பருப்பு தருது. 2000 கைதிகளுக்கு 200 கிலோ பருப்பு வருது. 50 கிலோ பருப்பை போட்டுட்டு பாக்கி 150 கிலோவும் பயன்படுத்திட்டோம்னு கணக்கு காட்டுறாங்க.
ஒரு நாளைக்கு பருப்புல மட்டுமே இவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னா கொள்ளையடிக்கிற மொத்த கணக்கையும் போட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துடும்'' என்கிறார் உள்ளே உணவருந்தி இப்போது வெளியில் இருக்கும் ஒருவர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையிலும் இதே கதைதான். இங்கே கூடுதலாக ஒரு விஷயம், சிறைக்குள்ளேயே சதித் திட்டங்கள் தீட்டப்படுவது. தென் மாவட்டத்தில் கொலையுண்ட பலரது முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டது பாளையங்கோட்டை சிறையில்தான்.
கொலைக்குற்றத்திற்காக பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ஒருவர் கூறும்போது,
``சார், ஜெயில் என்கிறது வெளில இருந்து பார்க்கத்தான் பயமா தெரியும். உள்ள எல்லாம் கிடைக்குது சார். ஒரு கைதியை பார்க்க வர்றவங்க பீடி அல்லது சிகரெட் மூணுபாக்கெட் கொண்டு வந்து கொடுக்கலாம். அவுங்க அந்த பீடி, சிகரெட்ல உள்ள தூளைக் கொஞ்சம் தட்டிவிட்டு அந்த இடத்தில் கஞ்சாவை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதே மாதிரி ஷாம்பு பாட்டில் உள்ளே சிம்கார்ட் போட்டு மூடிக் கொடுத்துவிடுவார்கள். கஞ்சாவுல இருந்து சோப்பு, சீப்பு, எண்ணெய், துண்டு என எல்லாமே உள்ள கிடைக்கும். விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெளில ஒரு பீடிக்கட்டு விலை இரண்டு ரூபாய்ன்னா உள்ளே இருபது ரூபாய்'' என்கிறார் அந்த கைதி.
மதுரை மத்திய சிறைக்குள் கஞ்சா, சரக்கு அயிட்டங்கள், பீடி, சிகரெட், செல்ஃபோன் சிம்கார்டு, தினமும் வெளியில் இருந்து மூணு வேைளக்கும் வகை வகையான சாப்பாடு பார்சல்கள் கிடைக்கும் என்கிறார்கள், இந்தச் சிறையின் அனுபவசாலிகள். இதைவிட அதிர்ச்சியான தகவல், கைதிகளை ரகசியமாய் வீட்டுக்கு அனுப்பும் விஷயம்.
நம்பிக்கையான நீண்ட நாள் கைதிகளை வீட்டுக்கு அனுப்பி ஒரு இரவு தங்கி வர அனுமதிப்பார்களாம். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்ற தகவலை ஒரு கைதி சொல்ல பகீரென்றிருக்கிறது. எத்தனை உண்மை என்று தெரியவில்லை.
சிறையில் கைதிகள் போட்டி போட்டு வாங்கும் இன்னொரு விஷயம், சிறை மருத்துவமனையில் இடம். உங்களிடம் பணமிருந்தால் `உடல் நிலை சரியில்லை' என்ற மருத்துவச் சான்றிதழோடு சிறை மருத்துவமனையில் ஜம்மென்று படுத்துக் கொள்ள முடியும்! இதற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகுமாம். அப்படியென்ன ஜெயில் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்கிறீர்களா?
ஒரு பெரிய ஹாலிலோ, அல்லது தனி அறைகளிலோ மெத்தையில் படுத்துக் கொள்ள முடியும். படிப்பதற்கு நாவல்கள், நினைத்த நேரத்தில் பொழுதைக் கழிப்பதற்கு கேரம் போர்டிலிருந்து, செஸ் ஆட்டம் வரை கிடைக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் அறைகள் கொடுமையாக இருக்கும். இங்கு இரவில் ஹோமோ செக்ஸ் வக்கிரம் சகஜமான விஷயம். புதிதாக வரும் கைதிகளைப் பயமுறுத்துவதற்காகவே இந்த ஹோமோ செக்ஸ் அறைகளில் அடைப்பார்கள். இதனால் அரண்டு போகும் புதியவர்கள் அடுத்த நாளே வார்டன்களை நல்ல விதத்தில் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு விஷயம், மேலே சொன்ன வசதிகள் எல்லாம் பணம் படைத்த, செல்வாக்கு மிக்க குற்றவாளிகளுக்குத்தான். சாதாரண குற்றவாளிகளுக்கு சிறை வாழ்க்கை கொடுமையானது. கழிப்பறை சுத்தம் செய்வது, பணக்கார ரவுடிகளுக்கு துணி துவைப்பது, தூங்கும்போது கால் அமுக்கிவிடுவது போன்ற வேலைகளையும் செய்ய வேண்டும். சிறையில் கிடைக்கும் உணவு கூட சரியான அளவு கிடைக்காது.
இந்த ஏழைக்கைதிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. பணக்காரன், ஏழை, சாதி, மத வித்தியாசம் எல்லாம் சிறை வாசத்தில் மறந்துபோகும் என்பார்கள். அது அந்தக் காலம் பணமிருந்தால் என்னமும் செய்யலாம். இதுதான் இன்றைய சிறை (அ)நீதி.
தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கி!நெல்லையில் ஒரு முக்கியமான கொலை வழக்கு. அதில் முக்கிய குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறான். அவனால் `தண்ணி'யடிக்காமல் இருக்க முடியாதாம். இதற்காக அவனுக்கு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கியை ஊற்றி சிறைக்குள் அனுப்புவது வழக்கமாம். என்னது இவனுக்கு மட்டும் அடிக்கடி தேங்காய் எண்ணெய் பாட்டில் வருகிறது என்று சந்தேகப்பட்ட ஒரு நேர்மையான வார்டன், உள்ளுக்குள் விஸ்கி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறை விலைப்பட்டியல் பீடிக்கட்டு ரூ. 30சிகரெட் ரூ. 100கஞ்சா ரூ. 20 (ஒரு சிகரெட்)பிரியாணி ரூ. 200செல்ஃபோன் பேச ரூ.50 (1 நிமிடம் பேச)செல்ஃபோன் வைத்துக்கொள்ள ரூ. 1000 (பத்து நாளுக்கு)மதுபானம் ரூ. 500 (பாட்டிலுக்கு)

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive