வெ. பாலசரஸ்வதி
ஒரு காக்கா வெகுதூரம் பறந்து போயிட்டேயிருந்தது.. வழியில அதுக்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சு… ஆறு, ஓடை, தேங்கியிருக்கிற தண்ணி என்று எதுவுமே கண்ல படல.. சோர்வா மரத்துமேல வந்து உக்காந்துச்சு. அந்த மரத்தடில ஒரு பானை இருந்துச்சு, காக்கா ஆர்வமா போயி பானையில என்ன இருக்குதுன்னு போய் பார்த்துச்சு… அதுல கொஞ்சுண்டு தண்ணி இருந்துச்சு, அதோட இருக்கிற கற்களை எல்லாம் ஒவ்வொன்னா.. எடுத்து போட்டு கிட்டே இருந்துச்சு.. தண்ணி மேல வந்தது, காக்கா தன் தாகத்த தீர்த்துக்குச்சு…
இது காக்கா கதைதாங்க ஆன நமக்காக சொல்லப்பட்ட கதை. இது தெரிஞ்ச கதைதாங்க. ஆனா எத்தனை முறை படிச்சாலும் நமக்குள்ள ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தக்கூடிய கதை… பானையில இவ்வளவு கீழே தண்ணியிருக்குதே இத நம்மாள குடிக்க முடியாதுன்னு காக்கா நினைக்கில… இந்தத் தண்ணிய நம்மால மேல கொண்டுவர முடியும்.. நம்ம தாகத்த தீர்த்துக் கொள்ள முடியும்னு நினைச்சது. முடிஞ்சுது. நம்மால முடியும்னு நம்ம நினைக்கனும். அப்பதான். வெற்றி பெற முடியும்.
நம்ம ஒவ்வொர்த்த கிட்டேயும் பானையில கொஞ்சமா இருந்த தண்ணீர் போலத்தான் திறமையிருக்கு. அது கற்களாலே மேல வந்தது போல நம்ம முயற்சியால திறமை வளர்க்கப்படும். திறமை வளர்ந்த பிறகு கட்டாயம் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். நமக்கு நேரம் நல்லாயிருக்கு. அப்படின்னு சொல்றதெல்லாம் நம்ம திறமை வெளிப்படும் காலம்னு சொல்ல்லாம். நேரம் சரியில்லன்னு சொல்றது எதனால….
ஒரு படி மேல ஏறும்போது கீழே விழுந்தோமானால் இது அந்த வழியில செல்லக்கூடாது. வேறு வழி பார்ப்போம் என்ற படிப்பை நாம் தெரிந்து கொள்கிறோம். சறுக்கி விழும்போதுதான் சரியான பாதை நமக்குத் தெரியும். என் இலக்கினை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும்.
ஒரு புழு இலையத் தேடி திங்கறதுக்கு உடம்ப நெழுச்சு நெழுச்சு நடந்து போகுது அது உடம்பு வலிக்குது. அதனால் நாம பறக்கணும்னு ஆசைப்படுது.. நம்மாலயும் பறக்க முடியும்னு நம்பிக்கை கொண்டதால, அது பட்டாம்பூச்சியாக முடிந்தது. பறக்கணும்னு நினைச்சது. இலைய வேகவேகமா தின்னுது, வேகவேகமாக கூடு கட்டுது உடம்ப சுருக்கி கூட்டுக்குள்ள உக்காந்து இறக்கைகளை உருவாக்கிக் கொள்ளுது. உடனே பறந்து பட்டாம் பூச்சியா வெளில வந்து என்னாலயும் பறக்க முடியுதுன்று ஒவ்வொரு மலர்களிடமும் போய் சொல்லுது. ஒரு நொடி கூட நிக்காம பறந்து கிட்டே இருக்குது. புழு கூட்டுக்குள்ளே இறக்கயை உருவாக்கறதுக்கு காலத்த அதுக்கு நேரம் சரியில்ல.. அப்படின்னு சொல்ல முடியுமா.. கூட்டுக்குள்ள இருந்து வெளியில வந்து பறந்த காலத்த அதுக்கு நல்ல காலம்னு சொல்ல்லாமா…?
சிறகுகள் இல்லாமலே எண்ணச் சிறகுகளைக் கொண்டு நம்மால எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக முடியும்.. அப்படிப்பட்ட நமக்கு முடியும் என்கிற இலட்சியத்தை முடிவு செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலே நம்மால நிச்சம் முடியும். இடைப்படுகின்ற தடைகளையோ.. துன்பங்களையோ ஏற்றுக் கொண்டு சோம்பல் மட்டும் இல்லாம உயர்வை மட்டும் நினைச்சோம்னா.. இனி நமக்கு எல்லாமே நல்ல காலம்தாங்க..
இனி நமக்கு நல்ல காலம்தான்..!
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, July 24, 2008
Labels: தன்னம்பிக்கை

0 comments:
Post a Comment