புதிய பாதை
தே.சௌந்தர்ராஜன்
BT பருத்தி உருவான விதம்
சமீக காலமாக அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் பேசப்படுவது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் இந்தியாவுக்கு தேவையா?
தற்போது பெரும்பாலான பயிரினங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் பல நாடுகளில் உற்பத்தி செய்து கொண்டு உள்ளார்கள். இவற்றில் அமெரிக்கா முன்னணியில் இருந்து வருகிறது.
BT பருத்தியில் ஆம்பித்து, BT மக்காச்சோளம், BT நெல், சோயா மொச்சை, கத்தரி, வெண்டை பன்ற காய்கறிகளிலும் மரபணு மாற்றம் செய்யப்பட பயிர்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை முறையிலும், விவசாயிகள் வயலிலும் எப்படி பயிரிடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பருத்தி மட்டும விவசாயிகள் பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று BT பருத்தி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு வெற்றிகரமான முயற்சி.
BT பருத்தி எப்படி இந்தியாவில் விவசாயிகள் மத்தியில் பிரபலம் ஆனது?
உலகில் பருத்தி பயிரிடும் பரப்பளவில் இந்தியாதான் முதலிடம். ஆனால் உலக உற்பத்தியில் இந்தியா 16% சதவிகிதம் தான் பங்களிக்கிறது. பருத்தியில் தாக்கும் 16 முக்கிய பூச்சிகளில், பருத்தி காய்ப்புழழு மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பலவகையான பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தியும் இந்த காய்ப்புழுவை சமாளிக்க முடியாமல், நிறைய விவசாயிகள் பருத்தி பயிரிடுவதை விட்டுவிட்டு வேறு பயிர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பருத்தி பயிரிடும் பரப்பளவு மற்றும் அதன் விளைச்சல் வெகுவாக குறைந்தது.
பூச்சி எதிர்ப்புத் தன்மையை உடைய ரகங்கள், தாய் ரகங்களான கருவுறுவதில் கிடையாது என்ற நிலைமையில், விஞ்ஞானிகள் இந்த காய்புழுவை கட்டுப்படுத்த மற்ற உயிரினத்தில் உள்ள நச்சுகளை தேடினர். இதனால் கிடைத்தது BT நச்சு - பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியாவில் உள்ள CM புரதம்
BT புரதம் காய் புழுவின் வயிற்றில் உள்ள அதிக காரத்தன்மையில் கரைந்து உடனே நச்சுத் தன்மையை உண்டாக்குகிறது. BT நச்சு வயிற்றில் உள்ள திசுக்களில் இணைந்து அதை சேதமடைய செய்கிறது.
1.BT நச்சு உயிர்கள்2. BT நச்சு புழுவின் வயிற்றில் ஒட்டி கொல்லுதல்3. நச்சு புழுவின் வயிற்றில் ஓட்டை உண்டாக்குதல்4. BT நச்சு புழு பூச்சி உடலில் செல்வதால் இறந்து விடுகிறது.
இதனால் காய்புழு, பருத்தி காயில் உள்ள BT நச்சு சாப்பிட்ட உடன் அதன் வயிற்றில் உள்ள செல்கள் சேதமடைந்து இறக்க நேரிடுகிறது.
BT பருத்தி எப்படி இந்தியாவில் நுழைந்தது?
1945ம் ஆண்டு, மகிகோ நிறுவனம் 100 கிராம் BT பருத்தியை (காக்கர் 312 ரகம்) மான்சான்டோ என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது.
இந்த பருத்தியை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்று பல போராட்டங்கள் நடந்தது . ஆனால் இவற்றின் பிற்கால நன்மையைக் கருதி இந்திய அரசு பயிரிட அனுமதி அளித்தது.
இந்த காகர் 312 BT பருத்தியில் உள்ள காய் புழு கொல்லும் தன்மை கொண்ட CRY உள்ள புரதம் உண்டாக்கும் மரபுக்கூற்றை இந்தியாவில் உள்ள பிரபலமான மகிகோ பருத்தி இரகங்களுக்கு மாற்றம் செய்து புதிய இரகங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்தது.
முதல் சில ஆண்டுகளில் அந்த அளவுக்கு BT பருத்தி விவசாயிகள் மத்தியில் பிரபலமடையவில்லை.
காரணம்:
1. BT நச்சுத்தன்மை - போதிய அளவு இல்லாததால் காய்புழு இறப்பு அதிக அளவில் இல்லை.
2. BT பருத்தி ரகங்கள் மற்ற பருத்தி ரகங்களைக் காட்டிலும் விளைச்சல் மற்றும் பருத்தி நூல் தன்மைகள் மேற்பட்டதாக இல்லை.
3. ஆனால் தற்போது உள்ள தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள 62க்கும் BT பருத்திகள் காய்புழுவை முழுவதுமாக கொல்லும் தன்மையுடன் அதிக விளைச்சல், நல்ல பருத்தி நூல் ஆகியவைகளை கொண்டதாக இருப்பதால், தற்போது விவசாயிகளால் பயிரிடப்படுகின்ற பெரும்பாலான பருத்திகள், BT பருத்தி ரகங்களாகவே இருக்கிறது.
மேலும் தனியார் நிறுவனங்களான ராசி பருத்தி விதைகள், மான்காண்டோ, மகிக்கோ, JK அக்ரி, ஆங்குர் விதை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள சிறந்த பருத்தி வீரிய ஒட்டுகளை BT வீரிய ஒட்டு ரகங்களாக மாற்றி, புதிய வீரிய ஒட்டு ரகங்களாக வெளிவிட்டதால், தற்போது பருத்தியில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விவசாயிகள் பெருமளவில் பயிரிடுகிறார்கள்.
புதிய பாதை
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, July 24, 2008
Labels: நாட்டு நடப்பு

0 comments:
Post a Comment