இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அந்நாட்டு அரசு வேகமாக நிகழ்த்தி வரும் நிலையில், அதிபர் ராஜபக்சேவின் தகவல் தொழில் நுட்ப சர்வதேச ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை 'ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கொழும்பில் வெளியிட்ட நடந்த விழாவில் வெளியிட்ட அதிபர் ராஜபக்சே,
கொழும்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவரான நாராயண மூர்த்தியை தலைமை விருந்தினராகவும் ராஜபக்சே அழைத்திருந்தார்.அதனையேற்று கொழும்பு சென்று அவ்விழாவில் கலந்துகொண்டார் மூர்த்தி.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா கண்டுள்ள வெற்றியின் ஈர்ப்பு காரணமாக இந்தியாவின் பக்கம் தனது பார்வையை திருப்பியிருப்பதாக கூறியதோடு, மேற்கண்ட அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த பொறுப்பை ஏற்க நாராயண மூர்த்தி ஒப்புக் கொண்டதாக இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பலிதா கோகோனாவும் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.
தமிழ் மக்களின் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை நிகழ்த்தி வருவதையும், அதற்கான இந்திய அரசின் உதவிகளையும் கண்டித்து ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடி வரும் நிலையில், நாராயண மூர்த்தி நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சேவின் ஆலோசகராக இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி நியமனம்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, February 16, 2009

0 comments:
Post a Comment