தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உலக கோப்பை வெல்ல முடியுமா? : கிரிக்கெட்டுக்கு ஹாக்கி சவால்

தேசிய விளையாட்டு தொடர்பான விவாதம் சூடு பிடித்துள்ளது. 8 முறை உலக கோப்பை வென்ற பிறகு,தேசிய விளையாட்டுக்கு கிரிக்கெட் உரிமை கொண்டாடலாம் என முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்ஜித் சிங் செய்னி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கும் ஹாக் கியை நீக்கிவிட்டு, கிரிக் கெட்டுக்கு தேசிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி வலியுறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து பல்ஜித் சிங் செய்னி கூறுகையில்,""ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இன்னும் இடம் பெறவே இல்லை. அதனால் முதலில் 8 முறை உலககோப் பையை கிரிக்கெட் வெல் லட்டும். பிறகு வேண்டுமானால் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்கலாம். இப்போது ஹாக்கி மோசமான நிலையில் இருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் விரைவில் நல்ல நிலைக்கு வந்துவிடும்,'' என்றார்.


அங்கீகாரம் இல்லை: முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான வாசுதேவன் பாஸ்கரன் கூறுகையில்,""தேசிய விளையாட்டாக இருந்தும் ஹாக்கிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த 1982, டில்லி ஆசிய கோப்பை போட்டிக்கு முன்புவரை நாம் புல்தரையில் தான் விளையாடினோம். அப்போது நம்மிடம் செயற்கை இழையிலான தளம் ஒன்றுகூட இல்லை. இருப்பினும் 8 ஒலிம்பிக் தங்கம் வென்றோம். 10, 12 அல்லது 20 நாடுகளில் விளையாடப்படும் கிரிக் கெட் இன்னும் ஒலிம் பிக்கில் நுழையவில்லை. ஆனாலும் வர்த்தக ரீதியில் சிறப்பாக செயல்படுவதால் தான் கிரிக்கெட் மோகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. மக்களின் ஆர்வமும், ஆதரவும், நவீன வசதியும் உள்ளது. இவை எல்லாம் உண்மையில் ஹாக்கிக்கு தான் கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார். ஹாக்கி வீரர் பல்ஜித்சிங் தில்லான் கூறுகையில்,"" பட்டோடியின் பேச்சு எனக்கு வியப்பு அளிக்கிறது. கிரிக்கெட் அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


"நம்பர்-1' அணியாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் போதிய வசதிகள் இல்லாத காலத்திலேயே இந்திய ஹாக்கி அணி 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது. இந்தியாவுக்கு பல மறக்க முடியாத தருணங்களை ஹாக்கி பெற்றுத்தந்துள்ளது,'' என்றார்.


கில் ஆதரவு: முன்னாள் ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் கே.பி.எஸ்.கில்., கூறுகையில்,"" ஹாக்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் 8 அல்லது 10 நாடுகளில் தான் விளையாடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஹாக்கி உள்ளது. ஆனால் கிரிக்கெட் இல்லை. யாரும் கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் சிறந்த உடல்திறன் உள்ளவர்கள் மட்டுமே ஹாக்கி விளையாட முடியும். ஹாக்கிதான் தேசிய விளையாட்டாக தொடர வேண்டும்,'' என்றார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive