அழிந்து போகும் நிலையில், நான்கு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் ஒன்றான அரிய வகை பெண் ஆமையால், அதன் இனம் விருத்தி செய்யப்படுமா என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். அந்த பெண் ஆமையின் வயது 80. மென்மையான ஓட்டுடன் கூடிய ராட்சத யாங்க் டெஸ் இனத்தை சேர்ந்த ஆமைகள் தற்போது, உலகளவில் நான்கு மட்டுமே எஞ்சி உள்ளது. நீண்ட தேடலுக்கு பின், கடந்த ஆண்டு ஒரு பெண் ஆமை கண்டுபிடிக்கப்பட்டு, சீனாவில் உள்ள கஜோவு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பெண் ஆமையின் வயது 80. ஏற்கனவே வனவிலங்கு பூங்காவில் உள்ள, இதே இனத்தை சேர்ந்த மூன்று ஆமைகளும், ஆண் ஆமைகள். அவற்றில் 100 வயது கொண்ட ஒரு ஆமையுடன், பெண் ஆமை அதிர்ஷ்டவசமாக இணைந்தது. பெண் ஆமைக்கு செயற்கை முறை மூலம் கருத்தரிக்கச் செய்வது மிகவும் கடினமான காரியம் என்பதால், அது முட்டை பொரிக்கும் காலம் வரை விஞ்ஞானிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர். எதிர் பார்த்த படியே இரண்டு முறை 10க்கு மேற்பட்ட முட்டைகளை பெண் ஆமை இட்டது. அவற்றை குஞ்சு பொரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த முட்டையும் குஞ்சு பொரிக்கவில்லை. இதனால், விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தாலும், மனம் தளராமல், அடுத்த சினைக் காலத்துக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
எஞ்சியிருப்பது 80 வயது ஒரே ஆமை : அரிய இனம் அழிவை தடுக்க முயற்சி
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, October 15, 2008
Labels: உலக செய்திகள்

0 comments:
Post a Comment