தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி

அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது,'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அவரது ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.


ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி: ரஜினியின் நண்பரான நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், "ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என்ற குரல், ரஜினி ரசிகர் களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத் தும் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.கோவையில் ஒரு படி மேலாக ரஜினி பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி, உறுப்பினர் விண்ணப்பம் உள்ளிட்டவற்றையும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினர்.


இந்த மாதம் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது."எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்ததால், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இரு நாட்களாக, ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கினர்.


ரசிகர்கள் உணர்வு குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:


சமீப காலமாக ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழகத்திலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாகப் புரிகிறது.


அனுமதிக்க மாட்டேன்: தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் "எந்திரன்' படப்பிடிப் பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள், அவரவர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப் படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, நான் நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். "அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.


அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்.


இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று தெளிவாகக் கூறாமல் மீண்டும் குழப்பமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive