தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

தமிழகத்திற்கு 500 மெகாவாட் :தருகிறது மத்திய அரசு முடிவுக்கு வருமா 'மின்வெட்டு' பிரச்னை?


தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 500 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுதவிர, மேலும் 200 மெகாவாட் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று டில்லிக்கு வந்திருந்தார். எரிசக்தித் துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேயையும், நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பகரூடியாவையும் சந்தித்துப் பேசினார்.



இந்த சந்திப்புகளின் போது தமிழகத் தில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இந்த சந்திப்புகள் குறித்து நிருபர்களிடம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:



தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலமாக 200 மெகாவாட் மின்சாரம் உடனடியாகவும், மேலும் 100 மெகாவாட் மின்சாரம் விரைவிலும் வழங்கப்பட உள்ளது. அதேபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மூலமாக 200 மெகாவாட் மின்சாரம் உடனடியாகவும், மேலும், 100 மெகாவாட் மின்சாரம் விரைவிலும் தமிழகத்திற்கு வழங்கப்படவுள்ளது.



இதுதவிர என்.டி.பி.சி., நிறுவனம் மூலமாக 100 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தின் மின்சாரத் தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை ஆயிரத்து 800 மெகாவாட் வரை உள்ளது. இதன்காரணமாக தினந்தோறும் சென்னையில் ஒன்றரை மணி நேரம் மட்டும் மின்தடை உள்ளது.



சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்தடை உள்ளது. கிராமப்புறங்களில் நாள்தோறும் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் மொத்தம் ஐந்து மணி நேரத்திற்கு மின்தடை செய்யப் படுகிறது. மத்திய அரசால் வழங்கப்படவுள்ள 500 மெகாவாட் மின்சாரத்தால் கிராமப்புறங் களில் நிலவும் மின்தடை ஓரளவுக்கு சரியாகவும் வாய்ப்புள்ளது.மின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில் பருவமழை சரியாக பெய்தாக வேண்டும். வடகிழக்கு பருவமழை பெய்தால், நீர் நிலைகள் நிரம்பி அதன்மூலம் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். தவிர கூடங்குளம் அணுமின்திட்டத்தையும் நம்பியுள்ளோம். ஆயிரம் மெகாவாட் மொத்த திறன் கொண்ட இந்த திட்டம் டிசம்பரில் செயல்படத் துவங்கம்போது, தமிழகத்தின் பங்கான 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதைக் கொண்டு மின்பற்றாக்குறை சமாளிக்கப்படும்.



நெய்வேலி நிறுவனத்தின் மொத்த திறன் இரண்டாயிரத்து 490 மெகாவாட். ஆனால், உற்பத்தி செய்யப்படுவதோ ஆயிரத்து 500 மெகாவாட் மட்டுமே. இதற்கு காரணம் நிலக்கரி தோண்டியெடுப்பதில் நிலவும் பிரச்னை. அங்குள்ள 2,3 மற்றும் 7 ஆகிய யூனிட்டுகள், சரிவர செயல்படவில்லை. இவையும் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சரிசெய்யப்பட்டு முழுவீச்சில் உற்பத்தி துவங்கும். தற்போது உற்பத்தி செய்யப்படும் ஆயிரத்து 500 மெகாவாட்டில் தமிழகத்தின் பங்கான 50 சதவீதம் கிடைத்து வருகிறது. இன்னும் 583 மெகாவாட் விரைவில் அளிக்கும்படி கேட்டுள்ளோம்.



மத்திய அரசு வழங்கப் போகும் மின்சாரத்தின் விலை சற்று அதிகம். யூனிட் ஒன்றுக்கு ரூ.ஏழு வரை விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் தான் தேவையே தவிர, விலை முக்கியமில்லை. தமிழகத்தில் 18 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கும், 12 லட்சம் நெசவாளர் களுக்கும் தமிழக அரசால் மின்சாரம் வழங்கப்படுகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து இதுவரை மின்கட்டணத்தை உயர்த்தியும் இல்லை.மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப் படும் தமிழகத்தின் டீசல் அளவின் பங்கை 30 சதவீதத்துக்கு உயர்த்தும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை தேர்தல் நேரத்து பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. காரணம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி, இலவச "டிவி', காஸ் அடுப்பு உள்ளிட்ட பலவற்றை மக்களுக்கு அளித்துள்ளோம்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive