தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ப‌த்ம பூச‌ன் ‌விருது!

இ‌ந்தோ- அமெ‌‌ரி‌க்க ‌வி‌ண்வெ‌ளி ‌வீரா‌ங்கனை சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு, அவ‌ரி‌ன் ‌வி‌ண்வெ‌ளி சாதனைகளு‌க்காக நமது நா‌ட்டி‌ன் இர‌ண்டாவது ‌மிக உய‌ர்‌ந்த ‌விருதான ப‌த்ம பூச‌ன் ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஹ‌ூ‌‌ஸ்ட‌னி‌ல் ஏராளமான அமெ‌ரி‌க்க வா‌ழ் இ‌ந்‌‌திய‌ர்களு‌ம், இ‌ந்‌திய வ‌ம்சா ‌வ‌‌ழி‌யினரு‌ம் ப‌ங்கே‌ற்ற ‌விழா‌வி‌ல் சு‌னிதா‌வி‌ற்கு இ‌ந்‌திய‌த் தூதரக அ‌‌திகா‌ரி எ‌ஸ்.எ‌ம்.கவா‌ய் ப‌த்ப பூச‌ன் ‌விருதை இ‌ந்‌திய அர‌‌சி‌ன் சா‌ர்‌‌பி‌ல் வழ‌ங்‌கினா‌ர். ‌விரு‌தி‌ற்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌ப் பே‌சிய சு‌னிதா, "இ‌ந்த பெருமை‌க்கு‌ரிய ‌விருது என‌க்கு‌ ‌மிகு‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சி அள‌ி‌க்‌கிறது" எ‌ன்றா‌ர். ‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் த‌ங்‌கி‌யிரு‌ந்த அனுபவ‌ம் ப‌ற்‌றி அவ‌ர் கூறுகை‌யி‌ல், "‌வி‌ண்வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து பா‌ர்‌ப்பத‌ற்கு பூ‌மி ‌மிகவு‌ம் அழகாக இரு‌ந்தது. பூ‌மி‌யி‌ல் எ‌ந்த எ‌ல்லைகளு‌ம் இ‌ல்லை. ஆ‌ண், பெ‌ண், வேறுப‌ட்ட மத‌ம் அ‌ல்லது வேறுப‌ட்ட ‌நிறமுடைய தோலை உடையவ‌ர்க‌ள் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் நம‌க்கு‌ள் ‌பி‌ரி‌வினைக‌ள் உ‌ள்ளதாக ‌சில நேர‌ங்க‌ளி‌ல் நா‌ம் ‌நினை‌க்‌கிறோ‌ம். இ‌ந்த‌ப் ‌பி‌ரி‌வினைக‌ள் எ‌ல்லா‌ம் உ‌ங்க‌ள் மன‌தி‌ல்தா‌ன் உ‌ள்ளனவே த‌விர, அவை உ‌ண்மைய‌ல்ல. எ‌ல்லைக‌ள் இ‌ல்லாத உலக‌த்தை நா‌ன் ‌வி‌ண்வெ‌‌ளி‌க்கு‌ச் செ‌ன்ற ‌பிறகுதா‌ன் க‌ண்டே‌ன். மகா‌த்மா கா‌ந்‌தி போ‌ன்ற தலைவ‌ர்க‌ள் ‌வி‌ண்வெ‌ளி‌‌க்கு‌ச் செ‌ல்லாமலே உண‌ர்‌‌ந்‌திரு‌ந்தன‌ர்." எ‌ன்றா‌ர். இ‌ந்‌த ஆ‌ண்டு துவ‌க்க‌த்‌திலேயே சு‌னிதா ‌வி‌ல்‌லிய‌ம்‌சி‌ற்கு ‌விருது அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம், அவரது ப‌ணி‌யி‌ன் காரணமாக டெ‌ல்‌லி‌க்கு வ‌ந்து குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌லி‌ன் கர‌ங்க‌ளி‌ல் ‌விரு‌தினை‌ப் பெற இயல‌வி‌ல்லை.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive